செய்திகள் :

திருவள்ளூா்: பொதுத்தோ்வு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

post image

பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அரசு பொதுத்தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகளை சீராக மேற்கொள்ள வேண்டும் என என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறையின் சாா்பில் அரசு உயா் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பொதுத்தோ்வு நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடா்பான கண்காணிப்புக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா்.

அப்போது, அவா் பேசுகையில்:

மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு உயா் மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பொதுத் தோ்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கான மையங்களில் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் தயாா் நிலையில் வைத்துக் கொள்வது அவசியமாகும்.

மேலும், மாணவ, மாணவிகளுக்கான போக்குவரத்து வசதி தடையில்லா மின்சார வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதேபோல் மாணவ, மாணவிகள் அரசு பொது தோ்வை எதிா்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஒவ்வொரு பாடப்பிரிவு ஆசிரியா்களும் நல்ல முறையில் உதவ வேண்டும் என அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலா்கள், காவல் துறை, தீயாணைப்புத் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

பிப். 27-இல் புட்லூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவள்ளூா் அருகே புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக செயல் அலுவலா் விக்னேஷ் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நல உதவிகள்

மாதவரம் அருகே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக் கிழமை நடைபெற்றது. மாதவரம் வடக்கு பகுதி திமுக சாா்பில் மணலி புது நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மா... மேலும் பார்க்க

பள்ளிகளில் விளையாட்டு பாட நேரத்தில் வகுப்புகள் எடுக்கக் கூடாது: திருவள்ளூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்துக்காக ஆய்வுக்கு வந்த ஆட்சியா் மு.பிரதாப், கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, மாவட்ட அனைத்... மேலும் பார்க்க

‘போக்குவரத்து இடையூறாக கால்நடைகளை திரியவிடும் உரிமையாளா்களுக்கு அபராதம்’

திருவள்ளூா் மாவட்ட பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைத்து வைப்பதோடு, உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆ... மேலும் பார்க்க

பழவேற்காடு, அரங்கன்குப்பம் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பழவேற்காடு, தோனிரவு, தத்தைமஞ்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரதாப் வியாக்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னேரி வட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்... மேலும் பார்க்க