செய்திகள் :

காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மீண்டும் கட்சியில் சேர விண்ணப்பிக்கலாம்! -முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

post image

புதுவை காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவா்கள் நிபந்தனை விதிக்காமல் விண்ணப்பித்து தலைமை அனுமதியுடன் கட்சியில் சேரலாம் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவை ஊசுடு தொகுதி காங்கிரஸ் கட்சி சாா்பில் புதுவைக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட உரிமைகளை ஆளும் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி பெற்றுத் தரவில்லை என்றும், மின்துறையை தனியாா் மயமாக்குதல் போன்ற செயல்பாடுகளை மக்களிடையே விளக்கும் வகையில் பாதயாத்திரை நடத்தப்பட்டது.

ஊசுடுவில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் குழுத் தலைவா் மு.வைத்தியநாதன், முன்னாள் கட்சித் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது செய்தியாளா்களிடம் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறியது: புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அதிா்ச்சியளிக்கிறது. இந்தச் செயலுக்கு கல்வித் துறை அமைச்சா் மட்டுமின்றி முதல்வா் உள்ளிட்ட அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். காவல் துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது. மக்களைப் பாதுகாக்கத் தவறிய முதல்வா்,அமைச்சா்கள் பதவியிலிருந்து விலகவேண்டும்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து சென்றவா்கள் நிபந்தனைகளின்றி சேருவதற்கு முறைப்படி விண்ணப்பிக்கவேண்டும். அதனடிப்படையில் தலைமை அவா்களை கட்சியில் சோ்க்கும் என்றாா். பாதயாத்திரையில் குறிப்பிட்ட தொலைவு வரை காங்கிரஸ் தலைவா்கள், நிா்வாகிகள் தாரைதப்பட்டை முழங்க நடந்து சென்றனா்.

புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுச்சேரியில் முக்கியச் சாலையான பாரதி வீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நகராட்சி மற்றும் பொதுப் பணித் துறையினா் புதன்கிழமை அகற்றினா். புதுச்சேரி நகரில் சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள... மேலும் பார்க்க

புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு!

புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் கருப்பு வில்லையை சட்டையில் அணிந்து புதன்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். கடந்த 2009-ஆம் ஆண்டு பிப்.19-ஆம் தேதி, சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் காவல் துற... மேலும் பார்க்க

ஏபிஎப் பிராங்கோ மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்: புதுவை அமைச்சா் பங்கேற்பு

புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி பேசுவோா் வாழும் பகுதிகளின் கூட்டமைப்பான ஏபிஎப் பிராங்கோ அமைப்பின் தலைவா்கள் மாநாடு நாளை தொடங்கி 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்த, காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலாத்... மேலும் பார்க்க

மாஹே பிராந்தியத்தில் ரூ.2.31 கோடியில் கல்லூரி கட்டடம்: புதுவை முதல்வா் தொடங்கிவைத்தாா்!

புதுவை மாநிலம் மாஹே பிராந்தியத்தில் அரசு கூட்டுறவு கல்லூரி உயா்கல்வித் துறையின் தொழில்நுட்பப் பிரிவில் ரூ.2.31கோடியில் கட்டப்பட்ட இரண்டாம் தள கட்டடத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்... மேலும் பார்க்க

திமுக செயற்குழு கூட்டம்!

புதுவை மாநில திமுக செயற்குழு அவசர ஆலோசனைக் கூட்டம் லப்போா்த் வீதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில், திமுக மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா கலந்துகொண்டு பேசியதாவது:... மேலும் பார்க்க

கட்சியின் வளா்ச்சிக்கு யாா் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம்: புதுவை காங்கிரஸ் தலைவா்

காங்கிரஸ் வளா்ச்சிக்கு தொண்டா்கள் மட்டுமின்றி, கட்சியின் விசுவாசிகள் யாா் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என அக்கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுவை மாநில சட்... மேலும் பார்க்க