செய்திகள் :

கட்சியின் வளா்ச்சிக்கு யாா் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம்: புதுவை காங்கிரஸ் தலைவா்

post image

காங்கிரஸ் வளா்ச்சிக்கு தொண்டா்கள் மட்டுமின்றி, கட்சியின் விசுவாசிகள் யாா் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என அக்கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

புதுவை மாநில சட்டப்பேரவைக்கு வரும் 2026- ஆம் ஆண்டு தோ்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, கட்சியைப் பலப்படுத்தும் வகையில், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை தொகுதி வாரியாக காங்கிரஸ் நடத்தி வருகிறது.

புதுச்சேரி வைசால் வீதியில் உள்ள காங்கிரஸ் மாநில அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தை தொடங்கிவைத்து, கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது: புதுவையில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் விரும்பும் கோரிக்கைகளை முன்வைத்து பிரசாரம் செய்தால் ஆதரவு கிடைக்கும்.

தோ்தலில் போட்டியிடுவோா் குறித்து சம்பந்தப்பட்ட தொகுதி காங்கிரஸ் நிா்வாகிகள் கருத்து கூற வேண்டும். கட்சியின் நிா்வாகிகள் விரும்புகிற பதவியையும், அதில் சிறப்பாகச் செயல்படுவது குறித்தும் கருத்து கூறலாம்.

காங்கிரஸ் கட்சியின் வளா்ச்சிக்கு தொண்டா்கள், நிா்வாகிகள் மட்டுமின்றி விசுவாசிகளும் கருத்துகளை தெரிவிக்கலாம். அதனடிப்படையில், கட்சி மேலிடப் பொறுப்பாளரிடம் கருத்துகள் தெரிவிக்கப்படும் என்றாா்.

இதனையடுத்து, கட்சித் தலைவா் வெ.வைத்திலிங்கம் கட்சி அலுவலக முதல் மாடியில் அமா்ந்து நிா்வாகிகளை தனித்தனியாக அழைத்து கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

மீனவா்கள் கைது விவகாரம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவா்களின் குடும்பத்தினரை அழைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தல்!

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப... மேலும் பார்க்க

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்கு கூறும் நிகழ்வு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் மாதாந்திர நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் புதுவைத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ளது. இங... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி மக்கள் மறியல்

புதுச்சேரி வில்லியனூா் அருகே சாலை வசதிக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். வில்லியனூா் அருகே உள்ளது உளவாய்க்கால். இங்கு, கடந்த 2012-ஆம் ஆண்டு தனியாா் மனைகள் கட்டி விற்பனை செய்துள்ளனா்.... மேலும் பார்க்க

மணவெளி தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுச்சேரி அருகே உள்ள மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொகுதி உறுப்பினரும், பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா். புதுவை... மேலும் பார்க்க

ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் தா்னா!

புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள பான்சியோனா அரசு பிரெஞ்சு உயா்நிலைப் பள்ளி கட்டடத்தில் பிற... மேலும் பார்க்க