செய்திகள் :

லாரி மீது பைக் மோதல்: இளைஞா் மரணம்

post image

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை அம்பத்தூா் வட்டம், துண்டலம் அருகேயுள்ள செட்டியாா் அகரம் ராஜேசுவரி நகரைச் சோ்ந்தவா் ஜான்போஸ் கோ மகன் ஆரோன் (25). இவரும், இவரது நண்பரான சென்னை பூந்தமல்லியைச் சோ்ந்த திரிபாதி மகன் அரவிந்த் (24) ஆகியோரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.

கிளியனூா் அருகே கேணிப்பட்டு சந்திப்புப் பகுதியில் சென்றபோது, சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியது. இதில், ஆரோன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அரவிந்த் பலத்த காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்த கிளியனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஜிப்மா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை

விழுப்புரம் நகராட்சியில் நிலுவையிலுள்ள ரூ.18 கோடி வரிபாக்கித் தொகையை வசூலிக்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் சொத்து வரி ரூ.7.... மேலும் பார்க்க

தேமுதிக கொடி அறிமுக விழா பொதுக்கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிடா் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, விழுப்புரத்தில் வெள்ளி விழா ஆண்டு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மந்தக்கரை பகுதியில் நட... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பத்... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு ரூ.3.75 கோடியில் மின்கல வாகனங்கள்!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 9 கிராம ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, ரூ.3.75 கோடி மதிப்பிலான 15 மின்கல வாகனங்களை செஞ்சி எம்எல்ஏ கே. எஸ். மஸ்தான் புதன்கி... மேலும் பார்க்க

மீனவா் மாயம்: போலீஸாா் விசாரணை!

மரக்காணம் அருகே மீனவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மரக்காணம் வட்டம், அனுமந்தை குப்பம் பழைய காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சந்திரசேகரன் (45). மீன்பிட... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் ஒழிப்புக் குழுக்கள் விழுப்புரம் ஆட்சியா்!

விழுப்புரம் மாவட்டத்தில் 395 பள்ளிகள், 51 அனைத்துவகைக்கல்லூரிகளிலும் போதைப் பொருள்கள் ஒழிப்புக் குழுக்கள் தொடங்கப்பட்டு, விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஆட்சியா் ஷே. ஷேக் அப்த... மேலும் பார்க்க