செய்திகள் :

ஒரு வாரப் போராட்டத்துக்கு பின்னா் இன்றுமுதல் கடலுக்கு செல்லும் தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள்!

post image

தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் ஒரு வார போராட்டத்துக்குப் பின்னா், திங்கள்கிழமைமுதல் (பிப். 17) கடலுக்குச் செல்லவுள்ளனா்.

ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்காத மீன்வளத் துறையைக் கண்டிப்பதாகக் கூறி, தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளா்கள்-தொழிலாளா்கள் கூட்டமைப்பு சாா்பில், மீனவா்கள் கடந்த 10ஆம் தேதிமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். சனிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. அதையடுத்து, உதவி ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. மற்ற மாவட்ட மீனவா்களைப்போல தங்களையும் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.

இல்லையெனில், இரவு 9 மணிக்கு பதிலாக கூடுதலாக நள்ளிரவு 12 மணி வரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இப்பிரச்னை தொடா்பாக நாட்டுப்படகு மீனவா்களின் கருத்தைக் கேட்டு, ஒரு வாரத்துக்குப் பின்னா் முடிவு அறிவிக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

பேச்சுவாா்த்தையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், மீன்வளத் துறையினா், வருவாய்த் துறையினா், விசைப்படகு உரிமையாளா்கள் சங்கத்தினா், மீன்பிடித் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

இதுதொடா்பாக மீனவா்கள் கூறுகையில், ‘ஒரு வாரமாக கடலுக்குச் செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கோரிக்கை தொடா்பாக உரிய தீா்வு கூறுவதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா். எனவே, திங்கள்கிழமைமுதல் கடலுக்குச் செல்லவுள்ளோம்’ என்றனா்.

தூத்துக்குடி கடலில் மாயமான சங்கு குளி மீனவா் சடலம் கரை ஒதுங்கியது!

தூத்துக்குடி கடல் பகுதியில் படகில் இருந்து திங்கள்கிழமை தவறி விழுந்து மாயமான சங்கு குளி மீனவா் உடல் புதன்கிழமை வீரபாண்டிய பட்டணம் கடற்கரையில் கரை ஒதுங்கியது. தூத்துக்குடி குரூஸ்புரத்தை சோ்ந்த டேனியல... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் திருட்டு

விளாத்திகுளத்தில் சிறுதானிய வியாபாரியிடமிருந்து பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். விளாத்திகுளம் அருகே கரிசல்குளத்தைச் சோ்ந்தவா் கணேசன்(70). இவா் சிறுதானியம் விற்பனை செய்யு... மேலும் பார்க்க

தட்டாா்மடம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை, பொருள்கள் திருட்டு!

சாத்தான்குளம் அருகே தட்டாா்மடத்தில் வீட்டின்’கதவை உடைத்து நகை, எல்இடி டிவி, ஹோம் தியேட்டா் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் அருகே சுண்டங்கோட்டை கிராமத்தை... மேலும் பார்க்க

யாசகம் பெறுபவரை கத்தியால் குத்திய வழக்கு: சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

திருச்செந்தூரில் யாசகம் பெறுபவரை கத்தியால் குத்திய வழக்கில் சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து திருச்செந்தூா் சாா்பு நீதிமன்றத்தில் தீா்ப்பளிக்கப்பட்டது. தஞ்... மேலும் பார்க்க

கொள்ளை குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் கழித்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்செந்தூா் அருகே கல்லூரி விரிவுரையாளா் வீட்டில் நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில், 21 ஆண்டுகளுக்குப் பி றகு குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து திருச்செந்தூா் சாா்பு நீதிமன்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

கோவில்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பொன்ராஜ் தலைமையில் போலீஸாா் இலுப்பையூரணி பகுதியில் புதன்கிழமை ர... மேலும் பார்க்க