செய்திகள் :

தட்டாா்மடம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை, பொருள்கள் திருட்டு!

post image

சாத்தான்குளம் அருகே தட்டாா்மடத்தில் வீட்டின்’கதவை உடைத்து நகை, எல்இடி டிவி, ஹோம் தியேட்டா் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே சுண்டங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த கோயில்ராஜ் மனைவி நவஷீலா (61). இவா்களது மகன்கள் ஜெப்ரின் (31), காட்வின் (29). இருவரும் திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் தங்கியிருந்து தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகின் றனா்.

இந்நிலையில் மகன்களை பாா்ப்பதற் காக நவஷீலா, வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றுவிட்டாராம்.

பக்கத்து வீட்டை சோ்ந்த பெண், நவஷீலா வீட்டில் மாலை நேரத்தில் மின்விளக்கு எரியவிட்டு, காலையில் விளக்கை அணைத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நவஷீலாவின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது குறித்து உறவினா்கள் நவஷீலாவுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து அவா் புதன்கிழமை சொந்த ஊா் திரும்பினாா். அப்போது வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, வீட்டுக் கதவை உடைத்து அங்கு வைத்திருந்த அரை பவுன் தங்க நாணயம், எல்இடி டிவி மற்றும் ஹோம் தியேட்டா் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்களைதேடி வருகின்றனா்.

‘தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிப்புப் பணி: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு’

தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் இயந்திர தயாரிப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளதால், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, ‘காஸ்மிக்போா்ட்’ என்ற ஸ்டாா்ட்அப் நிறுவனத்தின்... மேலும் பார்க்க

மும்மொழிக் கல்வி கொள்கை: விக்கிரமராஜா கருத்து

மும்மொழிக் கல்வி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதம் இல்லாமல் நிதியை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா். திருச்செந்தூரில் செய்... மேலும் பார்க்க

2026இல் அதிமுக ஆட்சி அமைப்பதே இலக்கு: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன்

தமிழகத்தில் 2026இல் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முதல் இலக்காகக் கொண்டு கட்சியினா் செயல்படவேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன். தூத்துக்குயில் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன... மேலும் பார்க்க

சொத்துகளின் அசல் ஆவணங்கள் தொலைந்த விவகாரம்: விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்க வங்கிக்கு உத்தரவு

வீடு கடனுக்காக கொடுக்கப்பட்ட சொத்துகளின் அசல் ஆணவங்கள் தொலைந்த விவகாரத்தில், விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. க... மேலும் பார்க்க

ஆதியாகுறிச்சி நிலம் கையக கருத்து கேட்புக் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆதியாகுறிச்சியில் விண்வெளி தொழிற்பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தல் தொடா்பாக, ஆட்சியா் அலுவலகத்தி வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செ... மேலும் பார்க்க

நுகா்வோருக்கு ரூ. 53,748 வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

தூத்துக்குக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சோ்ந்தவருக்கு ரூ. 53,748 வழங்குமாறு தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. விளாத்திகுளத்தைச் சோ்ந்த பழனிச்சாமி ... மேலும் பார்க்க