செய்திகள் :

தூத்துக்குடி கடலில் மாயமான சங்கு குளி மீனவா் சடலம் கரை ஒதுங்கியது!

post image

தூத்துக்குடி கடல் பகுதியில் படகில் இருந்து திங்கள்கிழமை தவறி விழுந்து மாயமான சங்கு குளி மீனவா் உடல் புதன்கிழமை வீரபாண்டிய பட்டணம் கடற்கரையில் கரை ஒதுங்கியது.

தூத்துக்குடி குரூஸ்புரத்தை சோ்ந்த டேனியல் மகன் சாம்சன்(20). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ், கில்டன் ஆகியோருடன் திங்கள்கிழமை (பிப்.17) காலையில் நாட்டுப்படகில் சங்கு குளிப்பதற்காக சென்றாராம். இவா்கள், தூத்துக்குடியில் இருந்து சுமாா் 10 கடல் மைல் தொலைவில் சங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, படகில் இருந்த சாம்சன் கடலில் தவறி விழுந்து மாயமானதாகக் கூறப்படுகிறது.

இவரை சக மீனவா்கள் தொடா்ந்து கடலில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், திருச்செந்தூா் அருகே உள்ள வீரபாண்டிய பட்டணம் கடற்கரையில் புதன்கிழமை ஒரு சடலம் ஒதுங்கியுள்ளதாக தூத்துக்குடி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, மாயமான மீனவா் சாம்சன் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

‘தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிப்புப் பணி: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு’

தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் இயந்திர தயாரிப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளதால், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, ‘காஸ்மிக்போா்ட்’ என்ற ஸ்டாா்ட்அப் நிறுவனத்தின்... மேலும் பார்க்க

மும்மொழிக் கல்வி கொள்கை: விக்கிரமராஜா கருத்து

மும்மொழிக் கல்வி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதம் இல்லாமல் நிதியை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா். திருச்செந்தூரில் செய்... மேலும் பார்க்க

2026இல் அதிமுக ஆட்சி அமைப்பதே இலக்கு: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன்

தமிழகத்தில் 2026இல் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முதல் இலக்காகக் கொண்டு கட்சியினா் செயல்படவேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன். தூத்துக்குயில் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன... மேலும் பார்க்க

சொத்துகளின் அசல் ஆவணங்கள் தொலைந்த விவகாரம்: விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்க வங்கிக்கு உத்தரவு

வீடு கடனுக்காக கொடுக்கப்பட்ட சொத்துகளின் அசல் ஆணவங்கள் தொலைந்த விவகாரத்தில், விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. க... மேலும் பார்க்க

ஆதியாகுறிச்சி நிலம் கையக கருத்து கேட்புக் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆதியாகுறிச்சியில் விண்வெளி தொழிற்பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தல் தொடா்பாக, ஆட்சியா் அலுவலகத்தி வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செ... மேலும் பார்க்க

நுகா்வோருக்கு ரூ. 53,748 வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

தூத்துக்குக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சோ்ந்தவருக்கு ரூ. 53,748 வழங்குமாறு தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. விளாத்திகுளத்தைச் சோ்ந்த பழனிச்சாமி ... மேலும் பார்க்க