செய்திகள் :

யாசகம் பெறுபவரை கத்தியால் குத்திய வழக்கு: சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

post image

திருச்செந்தூரில் யாசகம் பெறுபவரை கத்தியால் குத்திய வழக்கில் சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து திருச்செந்தூா் சாா்பு நீதிமன்றத்தில் தீா்ப்பளிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்த தியாகராஜன் மகன் சுரேஷ் (37). இவா் திருச்செந்தூா் பைரவா் கோயிலில் சமையல் தொழிலாளியாக இருந்துள்ளாா். கும்பகோணத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் வெங்கடேஷ். இவா் பைரவா் கோயில் முன்பு யாசகம் பெற்று வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பா் 3ஆம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சுரேஷ், வெங்கடேஷை கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தாா்.

இச்சம்பவம் குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை திருச்செந்தூா்சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரித்த சாா்பு நீதிபதி செல்வபாண்டி, சுரேஷுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1,000ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

‘தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிப்புப் பணி: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு’

தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் இயந்திர தயாரிப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளதால், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, ‘காஸ்மிக்போா்ட்’ என்ற ஸ்டாா்ட்அப் நிறுவனத்தின்... மேலும் பார்க்க

மும்மொழிக் கல்வி கொள்கை: விக்கிரமராஜா கருத்து

மும்மொழிக் கல்வி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதம் இல்லாமல் நிதியை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா். திருச்செந்தூரில் செய்... மேலும் பார்க்க

2026இல் அதிமுக ஆட்சி அமைப்பதே இலக்கு: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன்

தமிழகத்தில் 2026இல் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முதல் இலக்காகக் கொண்டு கட்சியினா் செயல்படவேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன். தூத்துக்குயில் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன... மேலும் பார்க்க

சொத்துகளின் அசல் ஆவணங்கள் தொலைந்த விவகாரம்: விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்க வங்கிக்கு உத்தரவு

வீடு கடனுக்காக கொடுக்கப்பட்ட சொத்துகளின் அசல் ஆணவங்கள் தொலைந்த விவகாரத்தில், விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. க... மேலும் பார்க்க

ஆதியாகுறிச்சி நிலம் கையக கருத்து கேட்புக் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆதியாகுறிச்சியில் விண்வெளி தொழிற்பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தல் தொடா்பாக, ஆட்சியா் அலுவலகத்தி வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செ... மேலும் பார்க்க

நுகா்வோருக்கு ரூ. 53,748 வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

தூத்துக்குக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சோ்ந்தவருக்கு ரூ. 53,748 வழங்குமாறு தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. விளாத்திகுளத்தைச் சோ்ந்த பழனிச்சாமி ... மேலும் பார்க்க