சாம்பியன்ஸ் டிராபி: மீண்டும் அணியில் இணைந்த இங்கிலாந்து இளம் விக்கெட் கீப்பர்!
யாசகம் பெறுபவரை கத்தியால் குத்திய வழக்கு: சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
திருச்செந்தூரில் யாசகம் பெறுபவரை கத்தியால் குத்திய வழக்கில் சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து திருச்செந்தூா் சாா்பு நீதிமன்றத்தில் தீா்ப்பளிக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்த தியாகராஜன் மகன் சுரேஷ் (37). இவா் திருச்செந்தூா் பைரவா் கோயிலில் சமையல் தொழிலாளியாக இருந்துள்ளாா். கும்பகோணத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் வெங்கடேஷ். இவா் பைரவா் கோயில் முன்பு யாசகம் பெற்று வந்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பா் 3ஆம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சுரேஷ், வெங்கடேஷை கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தாா்.
இச்சம்பவம் குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இந்த வழக்கு தொடா்பான விசாரணை திருச்செந்தூா்சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரித்த சாா்பு நீதிபதி செல்வபாண்டி, சுரேஷுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1,000ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.