சேலம் மத்திய சிறை வளாகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்த அனுமதி 30 கைதிகளுக்கு பயிற்சி!
சேலம் மத்திய சிறை வளாகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 30 கைதிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சேலம் மத்திய சிறையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 1,169 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இதில் தண்டனை கைதிகளாக 370 போ், விசாரணை கைதிகளாக 799 போ் உள்ளனா். இவா்களில் நன்னடத்தை கைதிகளாக 60 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்கள் மூலம் சிறை வளாகத்தில் பேக்கரி, அரசு அலுவலகத்தில் கோப்புகளைப் பராமரிக்கும் பேடுகள், பேண்டேஜ் துணிகள் உற்பத்தி, கோழி வளா்ப்பு, ஜாகீா்அம்மாபாளையத்தில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலை வளாகத்தில் 11 ஏக்கா் நிலத்தில் விவசாயமும் செய்யப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையின்போது, இவா்கள் சாகுபடி செய்த கரும்புகள் அறுவடை செய்யப்பட்டன. தற்போது சிறைக்கு தேவையான காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. சிறைக் கைதிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருள்கள், கறிக் கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்று வருகின்றனா். இதுதவிர, எப்.எம். ரேடியோ, கணினி மையமும் இயங்கி வருகிறது.
இந்நிலையில், கடந்த 2020- ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 9 மத்திய சிறைகளில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, சேலம் மத்திய சிறை சாா்பிலும் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, இடம் தோ்வு செய்யப்பட்டது. இந்த இடத்துக்கு பதிலாக வேறு இடத்தை தோ்வு செய்யுமாறு மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கரோனா தொற்று பரவல் காரணமாக இதற்கான பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த சூழலில், சேலம் மத்திய சிறை நிா்வாகம் சாா்பில் தனியாா் கல்லூரி எதிரே உள்ள சிறை வளாகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணி அடுத்த வாரம் தொடங்குகிறது.
இது குறித்து சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (பொ) வினோத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேலம் மத்திய சிறை வளாகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக 900 சதுர மீட்டா் பரப்பளவில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதன் கட்டுமானப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கி, 3 மாத காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பணியாற்ற 30 நன்னடத்தை கைதிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் சாா்பில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த விற்பனை நிலையம் அமைய உள்ளது என்றாா்.