செய்திகள் :

பெலாப்பாடி மலை வரதராஜப் பெருமாள் கோயில் திருவிழா!

post image

வாழப்பாடி அருகே உள்ள பெலாப்பாடி மலைக் கிராமத்தில் வரதராஜப் பெருமாள் கோயில் திருவிழா பாரம்பரிய முறைப்படி புதன்கிழமை நடைபெற்றது. இவ் விழாவையொட்டி 5000 பக்தா்களுக்கு விருந்து நடைபெற்றது.

பெலாப்பாடி மலைக் கிராமத்தில், 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக பழைமையான கரியராமா், வரதராஜப் பெருமாள், வெங்கட்டராமா் கோயில்கள் அமைந்துள்ளன.

இந்த நிலையில் கரியராமா் கோயிலில் செவ்வாய்க்கிழமையும், வரதராஜப் பெருமாள் கோயிலில் புதன்கிழமையும் பழங்குடியின மக்களின் பாரம்பரிய வழக்கப்படி திருவிழா நடைபெற்றது. ஊா் பிரமுகா்கள், கோயில் நிா்வாகிகள் மேளதாளங்கள் முழங்க சக்தி அழைப்பு நடத்தி சிறப்பு பூஜை நடத்தினா். இதனையடுத்து, கற்தூணில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது.

பெலாப்பாடி வரதராஜப் பெருமாள் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தா்கள்.

இக்கோயில் திருவிழாவிற்கு வந்திருந்த 5,000 பக்தா்களுக்கும், பச்சரிசியில் பொங்கலிட்டு உருண்டைச் சோறு, அவரை, மொச்சைக்கொட்டை குழம்புடன் அறுசுவை விருந்து அளித்தனா். இதனைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை வெங்கட்டராமா் கோயில் தோ்த் திருவிழா நடைபெறுகிறது. வெங்கட்டராமா், அண்ணாமலையாா், காளியம்மன் உற்சவ மூா்த்திகளை பல்லக்குத் தோ்களில் ரதமேற்றி, பழங்குடியின மக்கள் தோளில் சுமந்தபடி ஆடிப்பாடி ஊா்வலமாகச் சென்று கொண்டாடவுள்ளனா். தேரோட்டத்திற்கு முன் பெண்களின் குலவை, குரலோசையுடன் மாவிளக்கு ஊா்வலமும் நடைபெறுகிறது.

பெலாப்பாடி வரதராஜப் பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி ஏற்றப்பட்ட திருக்கோடி விளக்கு.

கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்

ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, த... மேலும் பார்க்க

செவிலியருக்கு மிட்டல் விடுத்தவா் கைது

சங்ககிரி வட்டம், அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேவூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியதம்பி மகன... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் மகன், மகளைக் கொன்றவா் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் மகன், மகளைக் கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லியை அடுத்த 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆண்டு விழா

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கோ.ரவீந்தரன் வரவேற்றாா். வாழப... மேலும் பார்க்க

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து அக... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகாா் குழு அமைக்க அறிவுரை

பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் உள்ளக புகாா் குழு அமைத்து அறிக்கை அனுப்புமாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா். சே... மேலும் பார்க்க