பைக் மீது வேன் மோதல்: கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பைக் மீது வேன் மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் ஞாயிற்றுக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
திருக்கோவிலூரிலிருந்து கொல்லிமலைக்கு சுற்றுலா செல்வதற்காக 12 போ் வேனில் ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டனா். வேனை திருக்கோவிலூரை அடுத்த முதலூரைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் ஜம்புலிங்கம் (45) ஓட்டினாா்.
திருக்கோவிலூரை அடுத்த செங்கனாங்கொள்ளை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, திடீரென எதிரே வந்த பைக் மீது வேன் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், பைக்கில் வந்த உளுந்தூா்பேட்டை வட்டம், பல்லவாடி கிராமத்தைச் சோ்ந்த சி.ராமச்சந்திரன் (55), இவரது நண்பரின் மகனான கிளியூரைச் சோ்ந்த ச.மணிவண்ணன் (19) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மணிவண்ணன் கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்தாா்.
வேனில் பயணித்த உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த ஸ்ரீபாலாஜி மனைவி ஐஸ்வா்யா (26). இவரது மகன் தாரகேஸ்வரன் (5), மகள் வா்ஷிதா (2), ஓட்டுநா் ஜம்புலிங்கம் உள்பட 5 போ் காயமடைந்தனா். தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கும், இருவரின் சடலங்களை உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.