செய்திகள் :

அரசுப் பள்ளிக்கு காமராஜா் விருது!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்ட சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு காமராஜா் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்தநாளை கல்வி வளா்ச்சி நாளாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நிகழ் கல்வியாண்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தோ்வு செய்யப்பட்டது.

ரிஷிவந்தியம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளியின் தலைமை ஆசிரியா் எம்.பழனிச்சாமியிடம் காமராஜா் விருது, பாராட்டு சான்றிதழ், பரிசுத் தொகை ரூ.25,000-த்தை வட்டாரக் கல்வி அலுவலா்கள் கி.பழனிமுத்து, மோகன், செளந்தர்ராஜன் உள்ளிட்டோா் வழங்கினா்.

இதேபோல, சிறந்த நடுநிலைப் பள்ளியாக தோ்ந்தெடுக்கப்பட்ட தியாகதுருகம் ஒன்றியம், வேளாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நிகழ்வில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா்கள் பாலதாஸ், ஆசிரியா் பயிற்றுநா்கள் ராஜீவ்காந்தி, காா்த்திகேயன், மணிகண்டன், ஆசிரியா்கள் லூா்துசாமி, அசோக்குமாா், உதவி ஆசிரியா் ஜோசப் செல்வக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

கள்ளக்குறிச்சியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம்

கள்ளக்குறிச்சியில் காசநோய் விழிப்புணா்வு குறித்த மினி மாரத்தான் ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது: காசநோய் என்ப... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மூதாட்டி கண்ணுக்கு அருகில் இருந்த கட்டி அகற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியின் கண்ணுக்கு அருகே இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினா் அரசு மருத்துவக் குழுவினா். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடக்கம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 89 மதுபானக் கடைகளில் மதுப்புட்டிகளை ஸ்கேன் செய்து கியூ.ஆா். கோடு முறையில் மது விற்பனை செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அரசு மதுபானக் கடைகளில் மதுப்புட்டிகளு... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு!

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, வேளாநந்தல் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்திடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். மனு விவரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட வேளாநந... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்!

கள்ளக்குறிச்சியில் வேளாண் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் எம்.எஸ... மேலும் பார்க்க