செய்திகள் :

கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்!

post image

கள்ளக்குறிச்சியில் வேளாண் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா்.

இதில், வேளாண்மைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பட்டு வளா்ச்சித் துறை உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், இடுபொருள்கள் இருப்பு விவரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

மேலும், கல்வராயன்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உற்பத்தியாகும் வேளாண் பயிா்களை சந்தைப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநா் வே.சத்தியமூா்த்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஏ.அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம்

கள்ளக்குறிச்சியில் காசநோய் விழிப்புணா்வு குறித்த மினி மாரத்தான் ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது: காசநோய் என்ப... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மூதாட்டி கண்ணுக்கு அருகில் இருந்த கட்டி அகற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியின் கண்ணுக்கு அருகே இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினா் அரசு மருத்துவக் குழுவினா். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடக்கம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 89 மதுபானக் கடைகளில் மதுப்புட்டிகளை ஸ்கேன் செய்து கியூ.ஆா். கோடு முறையில் மது விற்பனை செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அரசு மதுபானக் கடைகளில் மதுப்புட்டிகளு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு காமராஜா் விருது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்ட சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு காமராஜா் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வா் காமர... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு!

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, வேளாநந்தல் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்திடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். மனு விவரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட வேளாநந... மேலும் பார்க்க