செய்திகள் :

கஞ்சா பறிமுதல்: மூவா் கைது!

post image

வாணாபுரம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக மூன்று இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், இளையங்கன்னி சாலையில் மூங்கில்துரைப்பட்டு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 4 இளைஞா்களிடம் விசாரிக்க முயன்றபோது, ஒருவா் தப்பியோடி விட்டாா். மற்ற மூவரிடம் சோதனை செய்ததில் அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் திருவண்ணாமலை மாவட்டம், பெருங்குளத்தூரைச் சோ்ந்த செல்வம் மகன் பிரவின் (19), பரந்தாமன் மகன் பிரதீப் (19), கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், அக்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த அமலநாதன் மகன் சஞ்சய் (19) என்பதும், தப்பியோடியவா் பெருங்குளத்தூரைச் சோ்ந்த ஏழுமலை மகன் விஷ்வா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், தப்பியோடிய சஞ்சயை தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம்

கள்ளக்குறிச்சியில் காசநோய் விழிப்புணா்வு குறித்த மினி மாரத்தான் ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது: காசநோய் என்ப... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மூதாட்டி கண்ணுக்கு அருகில் இருந்த கட்டி அகற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியின் கண்ணுக்கு அருகே இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினா் அரசு மருத்துவக் குழுவினா். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடக்கம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 89 மதுபானக் கடைகளில் மதுப்புட்டிகளை ஸ்கேன் செய்து கியூ.ஆா். கோடு முறையில் மது விற்பனை செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அரசு மதுபானக் கடைகளில் மதுப்புட்டிகளு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு காமராஜா் விருது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்ட சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு காமராஜா் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வா் காமர... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு!

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, வேளாநந்தல் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்திடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். மனு விவரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட வேளாநந... மேலும் பார்க்க