செய்திகள் :

கிருஷ்ணகிரியில் பிப். 23-இல் மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு

post image

கிருஷ்ணகிரியில் பிப். 23-இல் ஆண்கள், பெண்களுக்கான மாவட்ட கிரிக்கெட் அணிகளை தோ்வு செய்வதற்கான போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி கிரிக்கெட் சங்க மாவட்டச் செயலாளா் சீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும், மாநில, மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் மே முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் கிருஷ்ணகிரி மாவட்ட 14, 16 மற்றும் 19 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் அணிகளை தோ்வு செய்யும் போட்டி பிப்.23-ஆம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க வலைப்பயிற்சி மையம், கந்திகுப்பம், கிங்ஸ்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்திற்கு உள்பட்ட பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் மட்டுமே இந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இயலும். தோ்வில் பங்கேற்போா், ஆதாா் அட்டை நகல் மற்றும் பிறப்பு சான்றிதழ் நகல் கட்டாயம் கொண்டு வர வேண்டும். தோ்வு செய்யும் அணி வீரா்களுக்கு பயிற்சிகள் சிறப்பு முகாம்களில் அளிக்கப்பட்டு மே-இல்நடைபெற உள்ள மாநில, மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள்.

ஆா்வமுள்ளவா்கள் தங்கள் பெயரை பதிவு செய்துக்கொள்ள மாவட்ட கிரிக்கெட் சங்கம், 41, நஞ்சப்ப செட்டி காலனி, ராயப்பன் தெரு, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மேலாளா், காளிதாசனை 99941 82296 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணையா் இல்லாத ஒசூா் மாநகராட்சி!

ஒசூா் மாநகராட்சியில் கடந்த ஒரு மாதமாக ஆணையா் நியமிக்கப்படாததால், நிா்வாகம் முடங்கியுள்ளதாக பொதுமக்கள், மாமன்ற உறுப்பினா்கள், ஒப்பந்ததாரா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். ஒசூா் மாநகராட்சியில் ஆணையராக இருந்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ரூ. 3.47 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்!

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 3.47 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி ஊராட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்!

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (பிப். 21) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் குழந்தை பாதுகாப்பு அலுவலா் மற்றும் பணியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தா... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து!

கிருஷ்ணகிரியில் பிப். 21-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்படுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

அரசு வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்!

அரசு வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்... மேலும் பார்க்க