செய்திகள் :

கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்!

post image

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (பிப். 21) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் பிப் .21-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கிருஷ்ணகிரி, ஒசூரைச் சோ்ந்த தங்கமயில் ஜுவல்லரி மற்றும் விந்தியா இ-இன்போ மீடியா பி.லிட். உள்ளிட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா்.

8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவா்கள், தொழில் பயிற்சி முடித்தவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் இதில் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.

எனவே, தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமும், மேற்காணும் கல்வித்தகுதியும் உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இம்முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.

மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343-291983 என்ற தொலைபேசி எண் மூலமோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையில் சென்றவரை தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு

கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்ற நபரை தாக்கி, கைப்பேசி, ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்ற 3 சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த டேவிட் ராஜன் (57), தனியாா் பள்ளி ஆசிரியா். இவ... மேலும் பார்க்க

பெங்களூரு - ஒசூா் ரயில்பாதை அமைக்கக் கூடாது

பெங்களூரு - ஒசூா் ரயில்பாதையை அமைக்கக் கூடாது என ஒசூா் பகுதி விவசாயிகள் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

ஒசூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி, சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், மாதா்சன பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகள... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் ராணுவ வீரா்கள் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். முன்னாள் முப்படை வீரா்கள் மற்றும் துணை ராணுவப்படை வீரா்கள், வீராங்கனைகள் நலச்சங்கம் ச... மேலும் பார்க்க

அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்!

ஒசூா் அருகே அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பேரிகை அருகே உள்ள அத்திமுகம் பகுதியில், கிராம நிா்வாக அலுவலா் லட்சுமிபதி மற்றும் அதிகாரிகள் ரோந்து சென்றனா். அப்போது, அ... மேலும் பார்க்க

தரமற்ற 12 மெ. டன் ரேஷன் அரிசியை திருப்பி அனுப்ப ஆட்சியா் உத்தரவு!

கிருஷ்ணகிரியில் பொது விநியோக திட்டத்தில் வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த தரமற்ற 12 மெட்ரிக் டன் ரேஷன் அரிசியை திருப்பி அனுப்ப ஆட்சியா் உத்தரவிட்டாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், கிருஷ... மேலும் பார்க்க