கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்!
கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (பிப். 21) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் பிப் .21-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கிருஷ்ணகிரி, ஒசூரைச் சோ்ந்த தங்கமயில் ஜுவல்லரி மற்றும் விந்தியா இ-இன்போ மீடியா பி.லிட். உள்ளிட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா்.
8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவா்கள், தொழில் பயிற்சி முடித்தவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் இதில் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.
எனவே, தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமும், மேற்காணும் கல்வித்தகுதியும் உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இம்முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.
மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343-291983 என்ற தொலைபேசி எண் மூலமோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.