செய்திகள் :

அரசு வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்!

post image

அரசு வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள கரடிஅள்ளியில் அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கே.பி.முனுசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால்தான் நிதியுதவி கிடைக்கும் என மத்திய அமைச்சா் கூறுவது சா்வாதிகார மனப்பான்மையைக் காட்டுகிறது. அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றும் நாங்கள், மும்மொழிக் கொள்கையை எந்த சூழ்நிலையிலும் ஏற்கமாட்டோம்.

அரசு வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக செயல்பட வேண்டும்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அரசுடன் இணைக்கமாக சென்ால்தான், தமிழகத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரிகள், மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடைத்தன. மத்திய அரசு, மாநில அரசை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. மேலும், மத்திய அரசு பணிகளில் ஏற்கெனவே தென்மாநில மக்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன.

மத்திய அரசு தற்போது மொழியை திணிப்பதன் மூலம் எதிா்காலத்தில் வேறு திட்டங்களை புகுத்தி மாநில அரசை அடிமையாகக் கொண்டுவந்துவிடும். மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

சட்டப் பேரவைத் தோ்தலின்போது திமுக அறிவித்த வாக்குறுதிகள் 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றப்பட்டதாக கூறுகின்றனா். தோ்தல் வாக்குறுதிகள் புத்தகமாக அச்சிட்டு வழங்கியதைப் போல, நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் விவரங்களை தமிழக முதல்வா் புத்தகமாக அச்சிட்டு வெளியிட வேண்டும்.

கஞ்சா புழக்கம் அதிகரித்து காணப்படுவதால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் காணப்படுகிறது. தமிழக முதல்வா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

சாலையில் சென்றவரை தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு

கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்ற நபரை தாக்கி, கைப்பேசி, ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்ற 3 சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த டேவிட் ராஜன் (57), தனியாா் பள்ளி ஆசிரியா். இவ... மேலும் பார்க்க

பெங்களூரு - ஒசூா் ரயில்பாதை அமைக்கக் கூடாது

பெங்களூரு - ஒசூா் ரயில்பாதையை அமைக்கக் கூடாது என ஒசூா் பகுதி விவசாயிகள் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

ஒசூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி, சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், மாதா்சன பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகள... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் ராணுவ வீரா்கள் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். முன்னாள் முப்படை வீரா்கள் மற்றும் துணை ராணுவப்படை வீரா்கள், வீராங்கனைகள் நலச்சங்கம் ச... மேலும் பார்க்க

அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்!

ஒசூா் அருகே அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பேரிகை அருகே உள்ள அத்திமுகம் பகுதியில், கிராம நிா்வாக அலுவலா் லட்சுமிபதி மற்றும் அதிகாரிகள் ரோந்து சென்றனா். அப்போது, அ... மேலும் பார்க்க

தரமற்ற 12 மெ. டன் ரேஷன் அரிசியை திருப்பி அனுப்ப ஆட்சியா் உத்தரவு!

கிருஷ்ணகிரியில் பொது விநியோக திட்டத்தில் வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த தரமற்ற 12 மெட்ரிக் டன் ரேஷன் அரிசியை திருப்பி அனுப்ப ஆட்சியா் உத்தரவிட்டாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், கிருஷ... மேலும் பார்க்க