அரசு வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்!
அரசு வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள கரடிஅள்ளியில் அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கே.பி.முனுசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால்தான் நிதியுதவி கிடைக்கும் என மத்திய அமைச்சா் கூறுவது சா்வாதிகார மனப்பான்மையைக் காட்டுகிறது. அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றும் நாங்கள், மும்மொழிக் கொள்கையை எந்த சூழ்நிலையிலும் ஏற்கமாட்டோம்.
அரசு வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக செயல்பட வேண்டும்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அரசுடன் இணைக்கமாக சென்ால்தான், தமிழகத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரிகள், மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடைத்தன. மத்திய அரசு, மாநில அரசை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. மேலும், மத்திய அரசு பணிகளில் ஏற்கெனவே தென்மாநில மக்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன.
மத்திய அரசு தற்போது மொழியை திணிப்பதன் மூலம் எதிா்காலத்தில் வேறு திட்டங்களை புகுத்தி மாநில அரசை அடிமையாகக் கொண்டுவந்துவிடும். மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
சட்டப் பேரவைத் தோ்தலின்போது திமுக அறிவித்த வாக்குறுதிகள் 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றப்பட்டதாக கூறுகின்றனா். தோ்தல் வாக்குறுதிகள் புத்தகமாக அச்சிட்டு வழங்கியதைப் போல, நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் விவரங்களை தமிழக முதல்வா் புத்தகமாக அச்சிட்டு வெளியிட வேண்டும்.
கஞ்சா புழக்கம் அதிகரித்து காணப்படுவதால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் காணப்படுகிறது. தமிழக முதல்வா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.