செய்திகள் :

மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடலுறுப்புகள் தானம்

post image

கடலூா் மாவட்டம், புவனகிரியில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

புவனகிரியைச் சோ்ந்தவா் தமிழ்ஒளி, பல் மருத்துவா். இவரது மகன் சரண் (20), புதுச்சேரியில் இரண்டாம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வந்தாா். இவா் அண்மையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து, புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு, சரணை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மூளைச்சாவடைந்ததாக தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினா் முடிவு செய்தனா். இதைத் தொடா்ந்து, சரணின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான புவனகிரிக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு அரசு சாா்பில் சிதம்பரம் உதவி ஆட்சியா் (பொ) சந்திரசேகரன், புவனகிரி வட்டாட்சியா் கணபதி உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

பல்கலை. போலி சான்றிதழ் தயாரிப்பு: மேலும் 4 போ் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெயரில் போலி சான்றிதழ்களை தயாரித்ததாக மேலும் 4 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். சிதம்பரத்தை அடுத்த கோவிலாம்பூண்டி வாய்க்கால் பாலம் அருகே கடந்... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக்குழு தலைவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

கடலூா் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவா் மற்றும் உறுப்பினா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுவ... மேலும் பார்க்க

திருநங்கை கொலை: 6 போ் கைது!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே திருநங்கை கொலை வழக்கில் 3 திருநங்கைகள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் வட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே காப்புக்காட்டில் திருநங்கை இற... மேலும் பார்க்க

சிங்காரவேலா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

சிங்காரவேலா் பிறந்தநாளையொட்டி, கடலூரில் தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள் சாா்பில் ‘தமிழ் தேசிய அரசியல் களத்தில் சிங்காரவேலரும், பெரியாரும்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதி 30 ஆடுகள் உயிரிழப்பு!

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சரக்கு வாகனம் மோதியதில் 30 செம்மறி ஆடுகள் புதன்கிழமை உயிரிழந்தன. திட்டக்குடி, வேப்பூா் உள்ளிட்டப் பகுதிகளில் வயல்வெளிகளில் விவசாயிகள் இயற்கை உரத்துக்காக ஆடுகளை கிடை ... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயலால் சேதமடைந்த பயிா்களுக்கு ரூ.209 கோடி நிவாரணம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண், தோட்டக் கலை பயிா்களுக்கு ரூ.209.41 கோடி நிவாரணத் தொகை வழங்க உள்ளதாக அந்தத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க