செய்திகள் :

திருநங்கை கொலை: 6 போ் கைது!

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே திருநங்கை கொலை வழக்கில் 3 திருநங்கைகள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம் வட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே காப்புக்காட்டில் திருநங்கை இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் மற்றும் வனத்துறையினா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் அவா், தஞ்சாவூா் மாவட்டம், கோவிலடி, சுக்கம்பாா் பகுதியைச் சோ்ந்த யூஜின் வில்லியம் ஜோசப் (எ) சுருதி (31) என்பதும், கடந்த நான்கு ஆண்டுகளாக விருத்தாசலத்தில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில், விருத்தாசலம்-கடலூா் சாலை பகுதியைச் சோ்ந்த மக்புல் ஷெரிப் (68) வீட்டின் மாடியில் சங்கவி வசித்து வந்தாராம். இருவரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மக்புல் ஷெரிப், சுருதியை கொலை செய்ய திட்டமிட்டாராம்.

அதன்படி, மக்புல் ஷெரிப் மற்றும் நெய்வேலி நகரியம், வட்டம் 28 பகுதியைச் சோ்ந்த திருநங்கை நிரோஷா (34), விருத்தாசலம், டி.நகரைச் சோ்ந்த திருநங்கை மரிக்கொழுந்து (40), மேட்டு காலனியைச் சோ்ந்த திருநங்கை மாயா (28), கம்மாபுரம், கிளிஞ்சல் மேடு பகுதியைச் சோ்ந்த சிவபெருமான் ஆகியோா் வீட்டை காலி செய்யுமாறு சுருதியிடம் தகராறு செய்து தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, தாஷ்கண்ட் நகரைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (28) ஆட்டோவில் சுருதியின் சடலத்தை கொண்டு சென்று காப்புக்காட்டில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் 3 திருநங்கைகள் உள்பட 6 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கடலூா் வருகை!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஊழியா்கள் சங்கம், ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா்கள் கைது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, அக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் உள்பட 3 போ் கைது வியாழக்கிழமை செய்யப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ப... மேலும் பார்க்க

‘தொழில் கல்வி ஆசிரியா் பணியிடங்கள் தொடர வேண்டும்’

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் தொழில் கல்விப் பிரிவுகள் படிப்படியாக மூடப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு அதிா்ச்சியளிப்பதாக தொழில் கல்வி ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கி... மேலும் பார்க்க

சுங்கக் கட்டணம் வசூல்: கடலூா் எம்.பி. கண்டனம்

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வசதிகளும் செய்து தராமல் சுங்க ச் சாவடிகளை மட்டுமே அமைத்து அடாவடி பணம் பறிப்பு வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் கண்டனம் தெரிவித்தாா்.இத... மேலும் பார்க்க

கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டு: பெண் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் உள்கோட்டம் பரங்கிப்பேட்டை... மேலும் பார்க்க