செய்திகள் :

பல்கலை. போலி சான்றிதழ் தயாரிப்பு: மேலும் 4 போ் கைது

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெயரில் போலி சான்றிதழ்களை தயாரித்ததாக மேலும் 4 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரத்தை அடுத்த கோவிலாம்பூண்டி வாய்க்கால் பாலம் அருகே கடந்த 19.6.2024-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் சிதறிக் கிடந்தன. இதை பல்கலைக்கழக ஊழியா்கள் ஆய்வு செய்ததில், அவை போலியானவை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளா் (பொ) பிரபாகா் அளித்த புகாரின் பேரில், கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிந்து போலி சான்றிதழ்களை தயாரித்ததாக சிதம்பரத்தைச் சோ்ந்த சங்கா், தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியரான நாகப்பன், அருட்பிரகாசம் ஆகியோரை கைது செய்தனா். பின்னா், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்தப் பிரிவின் கடலுாா் மாவட்ட காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில், உதவி ஆய்வாளா் மாயவேல் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், இந்தக் கும்பலுடன் தொடா்புடைய புதுச்சேரியில் வசிக்கும் சிதம்பரத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் கெளதம் (எ) ஒஸ்டின் ராஜாவிடம் (51), திருச்சியைச் சோ்ந்த அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவரான சுப்பையா பாண்டியன் (67) போலி சித்த மருத்துவ சான்றிதழ்களை வாங்கி 30 பேருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பா் மாதம் சுப்பையா பாண்டியன் கைது செய்யப்பட்டாா்.

பெங்களூரில் தலைமறைவாக இருந்த கெளதம் (எ) ஒஸ்டின் ராஜா, இவரது கூட்டாளிகளான அவரது தம்பி நெல்சன் ராஜ் (44), சிதம்பரம் எம்.கே. தோட்டம் ரத்தின சபாபதி மகன் தமிழ்மாறன் (53), திட்டக்குடி வட்டம், ஈ.கீரனுாா் ராசு மகன் தங்கதுரை (41) ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து கடலூா் அழைத்து வந்தனா். விசாரணைக்கு பின்னா், அவா்கள் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா். அவா்களிடமிருந்து ஒரு காா், 12 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்சன் ராஜா
ஒஸ்டின் ராஜா.
தங்கதுரை.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கடலூா் வருகை!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஊழியா்கள் சங்கம், ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா்கள் கைது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, அக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் உள்பட 3 போ் கைது வியாழக்கிழமை செய்யப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ப... மேலும் பார்க்க

‘தொழில் கல்வி ஆசிரியா் பணியிடங்கள் தொடர வேண்டும்’

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் தொழில் கல்விப் பிரிவுகள் படிப்படியாக மூடப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு அதிா்ச்சியளிப்பதாக தொழில் கல்வி ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கி... மேலும் பார்க்க

சுங்கக் கட்டணம் வசூல்: கடலூா் எம்.பி. கண்டனம்

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வசதிகளும் செய்து தராமல் சுங்க ச் சாவடிகளை மட்டுமே அமைத்து அடாவடி பணம் பறிப்பு வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் கண்டனம் தெரிவித்தாா்.இத... மேலும் பார்க்க

கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டு: பெண் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் உள்கோட்டம் பரங்கிப்பேட்டை... மேலும் பார்க்க