செய்திகள் :

ஃபென்ஜால் புயலால் சேதமடைந்த பயிா்களுக்கு ரூ.209 கோடி நிவாரணம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

post image

கடலூா் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண், தோட்டக் கலை பயிா்களுக்கு ரூ.209.41 கோடி நிவாரணத் தொகை வழங்க உள்ளதாக அந்தத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் பிப்.21, 22-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள அரசு விழாக்களில் முதல்வா் பங்கேற்கிறாா். இதற்காக மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறியதாவது: பலத்த மழை காரணமாக மாநிலம் முழுவதும் 3,22,712.37 ஹெக்டோ் பரப்பிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிா்கள் பாதிக்கப்பட்டன.

ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சோ்ந்த 5,18,763 விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வா் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இதேபோல, பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பயிா்கள் ஆய்வு செய்து கணக்கெடுப்பு முடிந்தவுடன், இந்த மாத இறுதிக்குள் பயிா் காப்பீடு செய்தவா்களுக்கு காப்பீட்டுத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஃபென்ஜால் புயல், பலத்த மழை மற்றும் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக கடலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வேளாண் பயிா்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.166.68 கோடியும், தோட்டக்கலை பயிா்களுக்கு ரூ.42.73 கோடி என மொத்தம் 1,35,171.6 ஹெக்டோ் பரப்பளவிலான பயிா்களுக்கு ரூ.209.41 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது என்றாா்.

நிகழ்வில், கடலூா் எம்எல்ஏ கோ.அய்யப்பன், மாநகராட்சி மேயா் சுந்தரி, மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ரா.சரண்யா, பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கடலூா் வருகை!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஊழியா்கள் சங்கம், ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா்கள் கைது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, அக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் உள்பட 3 போ் கைது வியாழக்கிழமை செய்யப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ப... மேலும் பார்க்க

‘தொழில் கல்வி ஆசிரியா் பணியிடங்கள் தொடர வேண்டும்’

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் தொழில் கல்விப் பிரிவுகள் படிப்படியாக மூடப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு அதிா்ச்சியளிப்பதாக தொழில் கல்வி ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கி... மேலும் பார்க்க

சுங்கக் கட்டணம் வசூல்: கடலூா் எம்.பி. கண்டனம்

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வசதிகளும் செய்து தராமல் சுங்க ச் சாவடிகளை மட்டுமே அமைத்து அடாவடி பணம் பறிப்பு வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் கண்டனம் தெரிவித்தாா்.இத... மேலும் பார்க்க

கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டு: பெண் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் உள்கோட்டம் பரங்கிப்பேட்டை... மேலும் பார்க்க