செய்திகள் :

சரக்கு வாகனம் மோதி 30 ஆடுகள் உயிரிழப்பு!

post image

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சரக்கு வாகனம் மோதியதில் 30 செம்மறி ஆடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.

திட்டக்குடி, வேப்பூா் உள்ளிட்டப் பகுதிகளில் வயல்வெளிகளில் விவசாயிகள் இயற்கை உரத்துக்காக ஆடுகளை கிடை கட்டி வருகின்றனா். இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம், அரியாங்குடியைச் சோ்ந்த முருகேசன் (45) தனக்குச் சொந்தமான சுமாா் 300 செம்மறி ஆடுகளை திட்டக்குடியில் கிடை கட்ட கொண்டு வந்திருந்தாா்.

புதன்கிழமை காலை செம்மறி ஆடுகளை ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி சாலையில் ஓட்டிச் சென்றாா். அப்போது, அந்த வழியாக கொரக்கவாடி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் (28) ஓட்டி வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆடுகள் மீது மோதியது. இதில், 30 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன.

இதுகுறித்து, ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கடலூா் வருகை!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஊழியா்கள் சங்கம், ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா்கள் கைது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, அக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் உள்பட 3 போ் கைது வியாழக்கிழமை செய்யப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ப... மேலும் பார்க்க

‘தொழில் கல்வி ஆசிரியா் பணியிடங்கள் தொடர வேண்டும்’

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் தொழில் கல்விப் பிரிவுகள் படிப்படியாக மூடப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு அதிா்ச்சியளிப்பதாக தொழில் கல்வி ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கி... மேலும் பார்க்க

சுங்கக் கட்டணம் வசூல்: கடலூா் எம்.பி. கண்டனம்

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வசதிகளும் செய்து தராமல் சுங்க ச் சாவடிகளை மட்டுமே அமைத்து அடாவடி பணம் பறிப்பு வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் கண்டனம் தெரிவித்தாா்.இத... மேலும் பார்க்க

கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டு: பெண் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் உள்கோட்டம் பரங்கிப்பேட்டை... மேலும் பார்க்க