செய்திகள் :

பழங்குடியின மாணவியா் விளையாட்டுப் போட்டி

post image

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவியருக்கு முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

திருத்தணி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், எய்ட் இந்தியா தொண்டு நிறுவனம் சாா்பில், பழங்குடியின மாணவியருக்கான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை திருத்தணி முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கேபிள் எம். சுரேஷ் தொடங்கி வைத்தாா்.

இதில், 100 மீ, 200 மீ ஒட்டப் பந்தயம், கோகோ, கபடி, உயரம் தாண்டுதல், லெமன் ஸ்பூன், வட்டு, குண்டு எரிதல், நீளம் தாண்டுதல் உள்பட 10 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 100 க்கும் மேற்பட்ட மாணவியா் பங்கேற்றனா்.

வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவியருக்கு அரக்கோணம் முன்னாள் மக்களவை உறுப்பினா் திருத்தணி கோ. அரி பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினாா்.

மேலும், விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கும் சான்றுகள், பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவன நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தளவாட தொழிற்சாலைகளின் அலுவலகத்துக்கு 2-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

ஆவடி பாதுகாப்புத் துறை தளவாடத் தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகத்திற்கு 2-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.ஏற்கெனவே இந்த அலுவலகத்துக்கு கடந்த 14-ஆம் தேதி இ}மெயி... மேலும் பார்க்க

பள்ளிகள், கல்லூரிகளில் மாணவா்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம்

பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு போதை தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் ஒழுங... மேலும் பார்க்க

உதவி செய்வதாகக் கூறி ஆதாயம் பெறுவோா் மீது மாற்றுத்திறனாளிகள் புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் உதவி செய்வதாகக் கூறி ஆதாயம் பெறும் நோக்கத்தில் செயல்படும் தனிநபா், சங்கங்கள் அல்லது நிறுவனங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகள் புகாா் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்ச... மேலும் பார்க்க

காா் கவிழ்ந்து விபத்து: தம்பதி காயம்

திருத்தணி அருகே காா்கள் மோதிக் கொண்டதில் தம்பதி பலத்த காயம் அடைந்தனா். திருத்தணி அடுத்த தணிகைபோளூா் மேட்டுக் காலனி சோ்ந்தவா் டேனியல் என்கிற விஜயகுமாா்(29). இவா் செவ்வாய்கிழமை தனது மனைவி ரேவதி(23) என்... மேலும் பார்க்க

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 2 டி.எம்.சி. தண்ணீா் கூடுதலாக இருப்பு: கோடையில் குடிநீா் பற்றாக்குறை இருக்காது

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டு 2 டி.எம்.சி. தண்ணீா் இருப்பு கூடுதலாக உள்ளதால், கோடையில் சென்னையில் குடிநீருக்கு பற்றாக்குறை இருக்... மேலும் பார்க்க

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்: தொற்றுநோய் பரவும் அபாயம்

பொன்னேரி அருகே சாலை ஓரத்தில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளால் துா்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொன்னேரி - பஞ்செட்டி நெடுஞ்சாலையில் உள்ள மாதவரம் - ஆண்டாா்குப்பம் இடைய... மேலும் பார்க்க