செய்திகள் :

"நான் கன்னட நடிகர் மட்டுமல்ல, பிரிவினை வேண்டாம்" - காந்தாரா நடிகர் ரசிகருக்குச் சொன்ன பதில்!

post image

2022-ம் ஆண்டு 'காந்தாரா' படத்திற்குக் கிடைத்த நாடுதழுவிய வரவேற்பை அடுத்து, இப்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

ஈஸ்வர பூந்தோட்டமான காந்தாரா வனத்தையும், தனது மக்களையும் காக்க அரச வம்சத்தினரை எதிர்த்தும், அரக்க சக்தியை எதிர்த்தும் நாயகன் போராடுவதும், குலங்களுக்கும் அரசுக்குமான போரும், அவர்களின் தெய்வ வழிபாடும்தான் இதன் கதைக்களம்.

இப்படத்தில் பொறுப்பற்ற, ஆணவமிக்க அகம்பாவ மிக்க குலசேகர அரசனாக நடித்து, கவனம் ஈர்த்திருக்கிறார் நடிகர் குல்ஷன் தேவய்யா.

காந்தாரா குல்ஷன் தேவய்யா
காந்தாரா குல்ஷன் தேவய்யா

Kantara: Chapter 1 Review: அசரடிக்கும் மேக்கிங் - `காந்தாரா - 2' தனித்து நிற்பது எங்கே?

ஆணவம், அகம்பாவம், வெறுப்பு, சூழ்ச்சி, கோழைத்தனமான வீரம், இரக்கமற்ற கொடூர குணம் என அத்தனை உணர்ச்சிகளையும் கொண்டு ராஜ ஆட்டம் ஆடி பார்வையாளர்களுக்குக் கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்கி, கதாபாத்திரத்திற்கு அத்தனை நியாயம் சேர்த்திருக்கிறார் குல்ஷன்.

சமூகவலைதளங்களில் அவரின் அட்டகாசமான அலட்டல் உருட்டல் நடிப்பிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கும் நடிகர் குல்ஷன் தேவய்யா, "கடந்த சில நாள்களாக வரும் பாராட்டுகளைக் கேட்டுக் கேட்டு அசந்துபோயிருக்கிறேன். தயவு செய்து இந்தப் பாராட்டுகளை நிறுத்திவிடாதீர்கள்.

உண்மையில் இந்தப் பாரட்டுக்கெல்லாம் நான் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும், "இந்தி பார்வையாளர்களுக்கு நீங்கள் ஒரு நடிகர், கன்னட ரசிகர்களான நாங்கள் உங்களை சொந்தம் கொண்டாடி அணைத்துக்கொள்வோம்" என்ற எக்ஸ் தள பதிவிற்குப் பதிலளித்த நடிகர் குல்ஷன், "உங்கள் உணர்வை நான் மனதார வரவேற்கிறேன். பிரிவினை வேண்டாம், எல்லாம் நம்முடைய மண், எல்லாம் நம் மொழிதான். நான் சினிமா மற்றும் கலைக்குச் சொந்தமானவன்" என்று பதிலளித்திருக்கிறார்.

இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rishab shetty: ராஷ்மிகா அறிமுகம்; தேசிய விருது வென்ற கிட்ஸ் படம்! - ரிஷப் ஷெட்டி, சில சம்பவங்கள்

கன்னட சினிமா உலகில் கடந்த சில வருடங்களாக பேசு பொருளாக மாறி நிற்கிற பெயர், ரிஷப் ஷெட்டி. நடிகர், இயக்குநர் என இருபக்கமும் சிறப்பாக திகழ்ந்து வருகிறார். அவருடைய படங்கள் பற்றிய ஒரு சிறிய தொகுப்புதான் இது... மேலும் பார்க்க

Kantara: `ஆபீஸ் பாய் டு பிரமாண்ட இயக்குநர்' - இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த ரிஷப் ஷெட்டி!

கன்னட சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக ரிஷப் ஷெட்டி இன்று பார்க்கப்படுகிறார். யக்ஷகானம் எனும் பாரம்பரியக் கலையில் வேரூன்றி, உடுப்பி மண்ணின் வாசனையைத் திரையில் கொண்டு வந்து, ரசிகர்களை வியக்... மேலும் பார்க்க

Kantara: "அனைத்து இந்திய இயக்குநர்களும் வெட்கப்பட வேண்டும்" - பாராட்டித் தள்ளிய ராம் கோபால் வர்மா

காந்தாரா எனும் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவை கன்னட சினிமா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி, அப்படத்தின் அடுத்த பாகமாக எடுத்திருக்கும் `காந்தாரா சாப்டர் 1' திர... மேலும் பார்க்க

காந்தாரா சாப்டர் 1: "இந்திய சினிமாவுக்குப் புதிய பெஞ்ச்மார்க்கை உருவாக்கியிருக்கிறது" - யஷ் பாராட்டு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.தற்போது அதன் ப்ரீக்வலாக 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் நேற... மேலும் பார்க்க

kantara-1: `படத்தை வீடியோ எடுத்து பகிரவோ, பதிவேற்றவோ வேண்டாம்' - ரிஷப் ஷெட்டி வேண்டுகோள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் ப்ரீக்வலாக 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் நே... மேலும் பார்க்க

Kantara: '2016-ல் ஒரு ஷோவிற்காகப் போராடிகிட்டிருந்தேன், ஆனால் இப்போ'- ரிஷப் ஷெட்டி

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் ப்ரீக்வலாக `காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் நே... மேலும் பார்க்க