செய்திகள் :

நாமக்கல்: நரசிம்மர் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

post image

நாமக்கல்: நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழாவில், நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சனேயர் உற்சவ மூர்த்திகளாக தெப்பத்தில் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் சுவாமியை கண்டு வழிபட்டனர்.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரே கல்லினாலான மலைக்கோட்டையில் நரசிம்மர், அரங்கநாதர் குடைவறைக் கோயில்கள் அமைந்துள்ளன. ஆஞ்சனேயருக்கு தனி சந்நிதி உள்ளது.

மலைக்கோட்டையை ஒட்டியவாறு உள்ள கமலாலயக் குளத்தில் 100 ஆண்டுகளக்கு முன் தெப்பத் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் ச. உமா, அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முயற்சியால் தெப்பத் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, மாசிமகம் நாளான புதன்கிழமை மாலை 6 மணியளவில் கமலாலயக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. முன்னதாக, அங்குள்ள நாமகிரி தாயார் மண்டபத்தில் நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சனேயர் சுவாமிக்கு அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை முழங்கி சிறப்பு யாக பூஜைகளை செய்தனர்.

அதன்பிறகு மூன்று சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்தில், மலர்களால் ஜோடனை, வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினர்.

தெப்பக் குளத்தில் மூன்று முறை சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மக்களவை உறுப்பினர் வி. எஸ். மாதேஸ்வரன் சட்டப்பேரவை உறுப்பினர் பெ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் ச.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணன், மாநகராட்சி ஆணையர் ரா.மகேஸ்வரி, கோயில் உதவி ஆணையர் ரா.இளையராஜா, அறங்காவலர் குழு தலைவர் கா.நல்லுசாமி மற்றும் அறங்காவலர்கள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அர்ச்சகர்கள், வாத்தியக் குழுவினர், துடுப்பு செலுத்துபவர்கள் என 20 பேர் மட்டும் தெப்பத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தெப்பத்திருவிழாவை, நேரு பூங்கா, அம்மா பூங்கா, குளக்கரை திடல், நாமக்கல் பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் நின்றவாறு ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

மலைக்கோட்டை மீது ஏறுவதற்கு போலீஸார் தடை விதித்திருந்தனர். தெப்ப உலாவின்போது தீயணைப்பு வீரர்கள் ஐந்து படகுகளில் பின்தொடர்ந்து சென்றனர்.

மாவட்டம் முழுவதும் இருந்து தீயணைப்பு வீரர்கள், போலீஸார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பக்தர்கள் நெரிசலின்றி தெப்பத்தை காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மாலை 6 மணி முதல் 8 மணி வரையில் இந்த தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இதையும் படிக்க | ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தேசிய சின்னத்தை அவமதிக்கவில்லை: தங்கம் தென்னரசு விளக்கம்

தேசிய சின்னத்தை அவமதிப்பதோ, குறைத்து மதிப்பிடுவதோ எங்களின் நோக்கம் அல்ல என்று தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.2025-26 நிதிநிலை அறிக்கை ஆவணத்தில் இருந்து ரூபாயின் அதிகா... மேலும் பார்க்க

கச்சத்தீவு திருவிழா: தமிழர்களின் பாதுகாப்புக்குச் செல்லும் கடற்படைக் கப்பல்கள், விமானம்!

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தொடங்கவிருக்கும் ஆண்டுத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, ராமேசுவரத்திலிருந்து செல்வோரின் பாதுகாப்புக்காக இந்திய கடலோரக் காவல் படையின் கப்ப... மேலும் பார்க்க

அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுப்பு

முதல்வா், துணை முதல்வா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஜீயா் குறித்து அவதூறு பரப்பியதாக கைதான திருச்சி ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திரு... மேலும் பார்க்க

நாளை 4 மண்டலங்களில் தமிழ்நாடு ஆசிரியா்கள் அறிவியல் மாநாடு

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தோ்வு செய்யப்பட்ட அறிவியல், கணித ஆசிரியா்களுக்கான தமிழ்நாடு ஆசிரியா்கள் அறிவியல் மாநாடு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, வேலூா் ஆகிய மாவட்டங... மேலும் பார்க்க

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு: சென்னை மாநகராட்சி

தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 100 இடங்களில் ஒளிபரப்பப்படவுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளைமுதல் வெயில் சுட்டெரிக்கும்

தமிழகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 15) முதல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க