செய்திகள் :

நாமக்கல்: பல ஆண்டுகளாக நடைபெறும் கிட்னி விற்பனை; தலைமறைவாக உள்ள புரோக்கருக்கு வலை

post image

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையத்தில் தொழிலாளிகளைப் குறிவைத்து கிட்னி விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூலித் தொழிலாளர்கள் பணத்தேவைகள் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து கிட்னி தானம் செய்தால் 10 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி புரோக்கர்கள் சம்மதிக்க வைப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பண நெருக்கடியில் சிக்கியுள்ள பலரும் தனியார் மருத்துவமனையில் தங்களது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிவிட்டு அதற்கு தொகையைப் பெற்றுவருகின்றனர். கிட்னி வழங்கியவர்கள் தமக்குத் தெரிந்த சிலரையும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கிட்னியை தானம் செய்ய வைக்கின்றனர்.

பள்ளிபாளையம்

இவர்கள் பல ஆண்டுகளாக புரோக்கர்கள் மூலம் கிட்னியை விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கும் தனியாக கமிஷன் வழங்கப்படுகிறது. புரோக்கர்கள் போலியான ஆவணங்களைத் தயார்செய்து தானம் வழங்குபவரை மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிமுகப்படுத்துகின்றனர். ஆவணங்களை சரி பார்க்கும் மருத்துவமனை நிர்வாகத்தினர் கிட்னி தேவைப்படும் நோயாளிகளையும் தானம் செய்பவர்களையும் ஒரே நாளில் அழைத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிப்பாளையம் கோரக்காட்டுவலவு பகுதியில் ஒருவர் கிட்னி விற்பனை செய்தால் 10 லட்சம் வரை பணம் கிடைக்கும் என ஏழைத் தொழிலாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி அழைப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்துள்ளது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ராஜ்மோகன் பள்ளிப்பாளையம் பகுதிகளில் விசாரணை நடத்தினார். குறிப்பாக புரோக்கராக செயல்பட்டவர் வீட்டில் சென்று விசாரணை மேற்கொண்டார். புரோக்கரின் வீடு பூட்டப்பட்டிருந்ததால் அருகே உள்ள வீட்டைச் சேர்ந்தவர்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ராஜ்மோகன் கூறுகையில், "பள்ளிப்பாளையம் அன்னை சத்யா நகரில் உள்ள ஆனந்தன் என்பவர் கிட்னி விற்பனை செய்யும் புரோக்கராக செயல்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளோம். அவரது வீட்டிற்கு சென்றபோது ஆனந்தன் இல்லை. அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூரைச் சேர்ந்தவர் எனவும், கடந்த 6 மாதங்களாக இங்கு தங்கியிருப்பதையும் தெரிவித்தனர். ஆனந்தன் தலைமுறைவானதால் அவர் மீது பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வீரமணி மூலம் பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர் பிடிபட்டாமல் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

'15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை...' - கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு

'2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக கூறினார்கள். இதை கோயில் நி... மேலும் பார்க்க

சென்னை: `போலீஸ்னு எனத் தெரியாம தப்பு பண்ணிட்டோம்’ - காவலர் கொடுத்த புகாரில் இளைஞர்கள் கைது

சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன். இவர் கடந்த 16.07.2025-ம் தேதி இரவு, அண்ணாநகர் கிழக்கு, 1வது அவென்யூ பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

சென்னை: கழிவறைக்குச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைதான பின்னணி

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதாகும் பெண் ஒருவர், சென்னை, மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கார்டனில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார். இவரின் கணவர் அந்தக் கார்டனில் வேலை செய்து வருகிறார். சம்... மேலும் பார்க்க

`வாரிசில்லாத தம்பதி நிலம்; போலி ஆவணம் மூலம் கிரையம்?' - முன்னாள் பாஜக நிர்வாகி மீது வழக்கு

கரூர் மாவட்டம், நெடுங்கூர் என்.பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிக்கு குழந்தையில்லை. இந்நிலையில், தங்கவேலுக்கும், பா.ஜ.க கரூர் மாவட்ட முன்னாள் தலைவர் ச... மேலும் பார்க்க

திமுக கவுன்சிலர் வீட்டுக்குள் புகுந்து தாக்கிய கும்பல்; திருச்சியில் சாலை மறியல்! - நடந்தது என்ன?

திருச்சி மாநகராட்சி 64-வது வார்டு கவுன்சிலராக, தி.மு.க-வைச் சேர்ந்த மலர்விழி என்பவர் உள்ளார். கழிவுநீர் சாக்கடை அமைப்பது தொடர்பாக வேல்முருகன் என்ற ஒப்பந்ததாரருக்கும், கவுன்சிலர் மலர்விழிக்கும் இடையே ப... மேலும் பார்க்க

சிசிடிவி கேமரா முன்பே ரூ.1.5 லட்சம் லஞ்சம் - சிக்கிய கோவை இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரி!

கோவை மாவட்டம், சூலூர் அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் தனியார் பராமரிப்பில் ஒரு கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு ரூ.40 லட்சம் ஆண்டு வருமானமாக வருகிறது. ஆனால், கோயிலில் முறையான நிர்வாகம் இல்லை என்று புகா... மேலும் பார்க்க