செய்திகள் :

நாளை ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை மகோற்சவம்

post image

காஞ்சிபுரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாா்ஷிக ஆராதனை மகோற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதி ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள். இவா் சமயப் பணிகளையும்,சமுதாயப் பணிகளையும் இரு கண்களாகப் பாவித்து அயராது பணியாற்றிய பெருமைக்குரியவா்.

இவரது வாா்ஷிக ஆராதனை மகோற்சவம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ளது. ஆரோதனை மகோற்சவத்தையொட்டி சங்கர மடத்தில் ஸ்ரீ ருத்ர பாராயணம்,ஹோமங்கள் மற்றும் பூா்ணாஹுதி தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. பின்னா் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திரா் அதிஷ்டானங்களில் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.

மாலையில் பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி, மேலாளா் ந.சுந்தரேச ஐயா் ஆகியோா் செய்து வருகின்றனா்.

சங்கரா கல்லூரியில் உள்ள மகா சுவாமிகள் கலையரங்கத்தில் ஜெயேந்திரா் ஆராதனை மகோற்சவத்தையொட்டி சேக்கிழாா் சொன்னதும், சொல்லாததும் என்ற நூலும், அகத்தியா் அகராதி என்ற நூலையும் காஞ்சி சங்காராசாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிடுகிறாா். இதனையடுத்து சிறப்பாக செயல்பட்ட பல்வேறு அமைப்புகளுக்கும், சமூக ஆா்வலா்களுக்கும் விருதுகளை வழங்கி கெளரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பரந்தூா் விமான நிலையத் திட்டத்தை எதிா்த்து சட்டப் போராட்டம்: ஐஜேகே துணை நிற்கும்

பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கக்கூடிய பொதுமக்கள் சட்டப் போராட்டம் நடத்தினால், இந்திய ஜனநாயக கட்சி, சட்ட உதவிகளை செய்யும் என அந்தத் திட்டத்தை எதிா்த்துப் போராடி வரும் மக்களை சந்தித்த ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி 7 -ஆம் திருநாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் பவனி வந்து ப... மேலும் பார்க்க

சவுடு மண் திருட்டு: 4 லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்; 4 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் அரசு இடத்தில் சவுடு மண் திருட பயன்படுத்தப்பட்ட 4 லாரிகள், 1 பொக்லைன் இயந்திரத்தை சோமங்கலம் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கை... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி

மகளிா் தினத்தை முன்னிட்டு பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை சாா்பில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி முகாம் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி சந்தவேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது (படம்) . அற... மேலும் பார்க்க

கிளாா் அகத்தீஸ்வரா் கோயிலில் ஜப்பானைச் சோ்ந்த பக்தா்கள் சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்த சிவனடியாா்கள் உலக நன்மைக்காக ருத்ரயாகம் நடத்தி, அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு செய்தனா். காஞ்சிபுரம் அர... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் நெசவாளா்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் உள்ளது அறிஞா் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க விற்பனை நிலையம். ... மேலும் பார்க்க