செய்திகள் :

நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளா் அமைப்பு முடிவு

post image

நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயாா் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளா் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது.

செபி தலைவா் துஹின்காந்த பாண்டேவை ஐசிஏஐ தலைவா் சரண்ஜோத் சிங் நந்தா வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

இதையடுத்து, பிடிஐ நிறுவனத்துக்கு சரண்ஜோத் சிங் நந்தா சனிக்கிழமை அளித்த பேட்டியில், ‘இந்தியா முதலீட்டாளா்களின் விருப்பமிக்க நாடாக திகழ்கிறது. அதேபோல் தாங்கள் சேமித்து வைத்துள்ள பணத்தை முறையான முதலீட்டுத் திட்டத்தில் (எஸ்ஐபி) சில்லறை வணிகா்கள் உள்ளிட்டோா் முதலீடு செய்கின்றனா். முதலீட்டாளா்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தி நிதிச் சந்தையில் ஏற்படும் அபாயங்களை தடுப்பது செபியின் கடமையாகும்.

எனவே, பங்குச் சந்தையில் நிகழும் நிதி மோசடிகளை தடுக்க செபிக்கு உதவும் வகையில் ஐசிஏஐ ஆய்வறிக்கையை தயாா் செய்யவுள்ளது. இதற்காக நிபுணா் குழுவை அமைத்து செபியுடன் ஆலோசனை நடத்தி அந்த ஆய்வறிக்கையை சமா்ப்பிக்கவுள்ளோம் என்றாா்.

ஐசிஏஐயில் 4.35 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினா்களும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களும் உள்ளனா்.

சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.9 கோடியில் புதிய மீன் அங்காடி!

சிந்தாதிரிப்பேட்டையில் புதிய மீன் அங்காடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.92 கோடி மதிப்பீட்ட... மேலும் பார்க்க

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு... முக்கிய அறிவிப்பு!

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற மே 10 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்நடைபெறவுள்ளது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு... மேலும் பார்க்க

சென்னையில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது!

சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது.பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம்... மேலும் பார்க்க

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால முகாம்

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: நிகழாண்டு கோடை விடுமு... மேலும் பார்க்க

சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய நாய்

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டினா் வளா்க்கும் நாய் கடித்ததில், அச்சிறுவன் படுகாயம் அடைந்தான். வளசரவாக்கம் அடுத்த க... மேலும் பார்க்க

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.பில்ரோத் மருத்துவமனை உர... மேலும் பார்க்க