செய்திகள் :

நிதீஷ் குமாரை மீண்டும் வெற்றிபெறச் செய்யுங்கள்: நிஷாந்த் குமார் வேண்டுகோள்!

post image

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது தந்தைக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இதுதொடர்பாக நிஷாந்த் குமார் கூறுகையில்,

பிகார் முதல்வரும், தனது தந்தையுமான நிதீஷ் குமார் மாநிலத்தில் நிறைய வளர்ச்சிப் பணிகளைச் செய்திருப்பதால் பிகார் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். கடந்த தேர்தலில் மக்கள் 43 இடங்களில் வெற்றியை வழங்கினர். வளர்ச்சியின் வேகத்தைத் தொடர, தேர்தலில் அதிக இடங்களை வெல்வதைப் பொதுமக்கள் உறுதிசெய்ய வேண்டும்.

கடந்த 19 ஆண்டுகளில் முதல்வர் நிதீஷ் குமார் செய்துள்ள கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லுமாறு ஐக்கிய ஜனதா தளத் தொழிலாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். வரவிருக்கும் தேர்தலுக்கு (நிதிஷ் குமார்) முதல்வர் வேட்பாளர் என்பதைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும். அவரது தலைமையில் பிகாரில் மீண்டும் அரசு அமைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

முன்னதாக இன்று காலை பிகார் தேர்தலில் தேசிய ஜனநாகக் கூட்டணி குறித்து பட்னாவில் அரசு விருந்தினர் இல்லத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவும், முதல்வர் நிதீஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கநலந்துகொண்டனர். பிகார் தேர்தலை எதிர்கொள்வது குறித்து முன்கூட்டியே தேர்தல் பணிகள் தொடர்பாக இருதரப்பினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பிகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி ஆட்சியில் உள்ளது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் 243 தொகுதிகளுக்கும் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. கடைசியாக 2020 அக்டோபர்-நவம்பரில் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரத்துக்கு ஓராண்டில் 13% வளர்ச்சி: சந்திரபாபு நாயுடு

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் 2024 - 25 நிதியாண்டில் ஆந்திர மாநிலம் 13% வளர்ச்சி அடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் ஆ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்! -சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டிலிருந்து ஒரேயொரு பொதுத்தேர்வுக்குப் பதிலாக இனி 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வரைவு அறிக்கைக்கு சிபிஎஸ்இ... மேலும் பார்க்க

திணறும் பிரயாக்ராஜ்..! கும்பமேளாவுக்கு யாரும் வர வேண்டாம் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி!

ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாந... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நத... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதியாக பதவியேற்றுள்ள தில்லி அரசு தெரிவித்துள்ளது.தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆ... மேலும் பார்க்க