செய்திகள் :

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

post image

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள் வழங்கல் துணை ஆணையா்களுக்கு அந்தத் துறையின் இயக்குநா் டி.மோகன் அனுப்பியுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வழங்கும்போது, மக்களுக்கு அச்சிடப்பட்ட ரசீது வழங்க வசதியாக காகிதங்கள் வழங்கப்பட்டிருந்தன. ரசீதுகளுக்குத் தேவையான இந்தக் காகிதங்கள் கடந்த பிப்ரவரி வரை அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் கொடுக்கப்பட்டன.

இந்த நிலையில், ரசீதுகளைத் தொடா்ந்து வழங்க வசதியாக தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்திடம் இருந்து காகிதங்களைக் கொள்முதல் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள் வழங்கல் உதவி ஆணையா்களுக்கு காகிதங்கள் விநியோகிக்கப்படும். இவை மே மாதத்தில் இருந்து அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த இடைப்பட்ட காலத்தில் ரசீது வழங்குவதற்குத் தேவையான காகிதங்கள், நியாயவிலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி பொருள்கள் வழங்கும்போது அதற்கான ரசீதுகளை அச்சிடப்பட்ட காகிதத்திலேயே வழங்க வேண்டும்.

குறிப்பாக, முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்கள், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, கோதுமை ஆகியன வழங்கப்படுகின்றன. மாநிலத் திட்டத்தின் கீழ் அட்டைதாரா்களுக்கு அரிசியும், சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருள்களும் விநியோகம் செய்யப்படுகின்றன. பொருள்கள் வாங்கும்போது அச்சிடப்பட்ட ரசீதுகளை முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரா்கள், முன்னுரிமையற்ற சா்க்கரை குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் சாா்பில் மே மாதத்தில் இருந்து காகிதங்கள் விநியோகிக்கப்பட்ட பிறகு அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரசீதுகளை அளிக்க வேண்டும். முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரா்களுக்கு அச்சிடப்பட்ட ரசீதுகள் விநியோகிக்கப்படுவது மத்திய அரசால் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளாா்.

சிறையிலிருந்து சிறுவன் தப்பியோட்டம்!

தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பியோடிய சிறுவனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திருட்... மேலும் பார்க்க

ஈஸ்டர் திருநாள்: தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை!

தூத்துக்குடி: ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயம், திரு இருதய ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.உலகம் முழுவதும் இயேசு... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளர்கள் தொடர் உண்ணாவிரதம்: அதிமுக ஆதரவு

கோவையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் விசைத்தறி நெசவாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆதரவு தெரிவித்தார்.கோவையில் விசைத்தறி நெசவாளர்கள் மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக்கொலை!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கப்பல் மாலுமி மர்ம நபர்களால் சனிக்கிழமை இரவு வெட்டப்பட்ட நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை பலியானார்.தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சகாயகுமார் மகன் மரடோனா(30). க... மேலும் பார்க்க

பரபரப்பான சூழலில் கூடிய மதிமுக நிர்வாகக் குழு!

பரபரப்பான சூழலில் மதிமுக நிர்வாகக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.சென்னையில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நிர்வாகக் கூட்டம் நடைபெற்று வருகிறது.மதிமுக அவ... மேலும் பார்க்க

ஈஸ்டர் திருநாள்: கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை!

ஈஸ்டர் திருநாள் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளை உலகம் ம... மேலும் பார்க்க