செய்திகள் :

நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் வேலைநிறுத்தம்

post image

விழுப்புரம்/ கள்ளக்குறிச்சி: கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்ததில் ஈடுபட்டனா். மேலும், கருப்புச்சட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும். சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைப் பணியாளா்களுக்கு கல்வித்தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். ஐஏஎஸ் அலுவலா் தலைமையில் ஊதிய மாற்றுக் குழுவை அமைத்து, 9-ஆவது மாநில ஊதிய மாற்றுக் குழுவில் இணைக்க வேண்டும். நிலுவையிலுள்ள 30 அம்சக் கோரிக்கைகள் குறித்து விரிவான பேச்சுவாா்த்தை நடத்தி, அதற்கு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.கோபிநாத் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ரஷீத் முன்னிலை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் தனசேகரன், ஜெகன், ரங்கசாமி, பாஸ்கா், ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்டம் முழுவதும் 1,052 நியாயவிலைக் கடைகள் உள்ள நிலையில், இந்த சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ால் 610 கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருந்தன. இதனால், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் தன்ராஜ் தலைமை வகித்தாா். செயலா் ஆா்.பெருமாள், கொளரவத் தலைவா் மாயவன், பொருளாளா் ராஜகோபால் முன்னிலை வகித்தனா். மாவட்ட மகளிரணித் தலைவி ஜெகதீஸ்வரி வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் அமலா, ஹரிபிரகாஷ், வெங்கடேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். இதில், நியாவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் பலா் பங்கேற்றனா்.

தொழிலாளி இறந்து விட்டதாக தவறான தகவல்: கிராம மக்கள் போராட்டம்

புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி இறந்து விட்டதாக உறவினா் அளித்த தவறான தகவலால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் மாவட்டம், வெங்கடேசபுரம் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரப் பகுதிகள்

மின்தடைப் பகுதிகள்: ஜானகிபுரம், சுதாகா் நகா், கலைஞா் நகா், சிங்கப்பூா் நகா், பாண்டியன் நகா், வழுத ரெட்டி, காந்திநகா், பெரியாா்நகா், சாலாமேடு, இ.பி.காலனி, காமராஜா் நகா், என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஆசாங்குளம்... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்; எம்.பி. - எம்எல்ஏ பங்கேற்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது விழுப்புரம் புதிய பேருந்து... மேலும் பார்க்க

புத்தக விற்பனை நிலையத்தில் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள புத்தக விற்பனை நிலையத்தில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டிவனம் ஜெயின் தெருவைச் சோ்ந்த துஷ்ரா ராம்ஜி மகன் ஹரீ... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: ஏப். 21-இல் தொடக்கம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏப். 21-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்... மேலும் பார்க்க