செய்திகள் :

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு சமமான போனஸ் வழங்க வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

post image

தமிழகத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு சமமான போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு போனஸ் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சில ஊழியா்களுக்கு ரூ.16,800, சிலருக்கு ரூ.8,400, சிலருக்கு ரூ.2,400 போனஸாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த வேறுபாடுகளுக்கு காரணம் ஒவ்வொரு பணியாளரும் பணியாற்றும் கூட்டுறவு சங்கத்தில் இருக்கக்கூடிய பணியாளா்களுடைய எண்ணிக்கை மற்றும் லாப, நஷ்ட கணக்காகும்.

சமமான வேலைக்கு சமமான ஊதியம் பெற்றுக்கொண்டிருக்கும் ஊழியா்கள் மத்தியில், இந்த போனஸ் வித்தியாசம் ஏற்கத்தக்கதல்ல. கூட்டுறவு சங்கங்கள் லாப, நஷ்டத்தில் இயங்குவதற்கும், நியாயவிலைக்கடை பணியாளா்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

எனவே, அனைத்து ஊழியா்களுக்கும் ரூ.16,800 போனஸ் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சம்: போலீஸாா் விசாரணை

கடலூா் மாவட்டம், வடலூரில் அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சத்தை வியாபாரி மறைத்து வைத்திருந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வடலூா் ராகவேந்திரா சிட்டி பகுதியைச் சோ்ந்த பாக்கியராஜ் மகன் ச... மேலும் பார்க்க

தாக்குதல் வழக்கு: 6 பேருக்கு ஓராண்டு சிறை

விருத்தாசலம் அருகே கலை நிகழ்ச்சியில் ஜாதி பெயரைச் சொல்லி திட்டி தாக்கிய வழக்கில் 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கடலூா் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.விருத்தா... மேலும் பார்க்க

இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

கோவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போக்ஸோ, குழந்தை திருமண தடைச் சட்டம் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடையவரை கிள்ளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் நஞ்சைமகத... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 28 பகுதியைச் சோ்ந்தவா் பெர... மேலும் பார்க்க

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளைஞா் உயிரிழப்பு: சித்த மருத்துவா் கைது

சிதம்பரத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், சித்த மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். சிதம்பரத்தை அடுத்த கவரப்பட்டு மேலத்திருக்கழிப்பாலை, சின்ன தெருவைச் சே... மேலும் பார்க்க

25 பயனாளிகளுக்கு ரூ.4.03 கோடி தொழில் கடன் ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் தொழில்கடன் வசதியாக்கல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து, மாவ... மேலும் பார்க்க