செய்திகள் :

நியூயார்க்: 5 நாள்களுக்கு மூடப்படும் கோழிப் பண்ணைகள்!

post image

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சலை கட்டுபடுத்த அங்குள்ள நகரங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கோழிப் பண்ணைகள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரத்தின் தி குயின்ஸ், தி பிரோன்ஸ் மற்றும் ப்ரூக்ளின் போரொஸ் ஆகியப் பகுதிகளிலுள்ள சந்தைகளில் கடந்த ஜன.31 முதல் மொத்தம் 7 பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதனால், அம்மாகாணத்திலுள்ள நியூயார்க் நகரத்திலும் மற்றும் வெஸ்ட்செஸ்டர், சப்போள்க், நஸ்ஸாவு ஆகிய மாவட்டங்களிலும் உள்ள கோழிப் பண்ணைகள் அனைத்தும் பறவைக் காய்ச்சலை கட்டுபடுத்துவதற்காக அடுத்த 5 நாள்களுக்கு மூடப்படுவதாக நியூயார்க் மாகாண ஆளுநர் கேதி ஹோச்சூல் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்குள்ள சந்தைகளிலுள்ள அனைத்து பொருள்களையும் விற்று, சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்யும் நடைமுறைகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளன.

இதையும் படிக்க:நியூயார்க்: இந்திய வம்சாவளி நபருக்கு 25 ஆண்டுகள் சிறை!

தற்போது வரை நியூயார்க்கில் மனிதர்கள் யாருக்கும் இந்த நோயின் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வளர்ப்பு மற்றும் வனப் பறவைகளுடன் அதிகளவில் தொடர்பிலுள்ள நபர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் போன்றவற்றை அணிந்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவில் கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல் 67 பேர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் அதில் ஒருவர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவியன் இன்புளுவன்ஸா என்றழைக்கப்படும் இந்த நோயானது வைரஸ் தாக்குதல்களினால் ஏற்படுவதாகும்.

இதனால், பாதிக்கப்படும் பறவைகள் மற்றும் விலங்குகள் கடுமையான நோயினால் அவதிப்படுவதுடன் உயிரிழக்கக் கூடிய அபாயம் உள்ளதாகவும் மனித கண்கள், மூக்கு, வாய் வழியாகவோ அல்லது சுவாசக் காற்றின் மூலமாகவும் இந்த கிருமி நுழைவதின் மூலம் இந்த நோயின் பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

அமைதியை நிலைநாட்ட அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது: மணிப்பூர் முதல்வர்

வடக்கிழக்கு மாநிலமான மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தனது தலைமையிலான அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருவதாக அம்மாநில முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.அம்மாநிலத்தில் அசாம் ரைப்பில்ஸ... மேலும் பார்க்க

ரூ.7 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்! 3 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.7 கோடி அளவிலான தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார். அசாமின் ஸ்ரீபூமி மாவட்டத... மேலும் பார்க்க

சீன நிலச்சரிவில் 30 பேர் மாயம்! தேடும் பணி தீவிரம்!

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மாயமானோரைத் தேடும் பணி அந்நாட்டு மீட்புப் படையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று (பிப்.8)... மேலும் பார்க்க

15 தலிபான் தீவிரவாதிகள் கைது!

பாகிஸ்தானில் 15 தலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத் தடுப்புப் படையினர் கிடைக்கப்பெற்ற 143 ரகசி... மேலும் பார்க்க

அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷியப் பாடகர் மர்ம மரணம்!

ரஷிய அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த அந்நாட்டு பாடகரின் வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.ரஷியாவின் ஊரால்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த போர் எதிர்பாளரும... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் பர்வேஷ்?

புதுதில்லி: புதுதில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர் பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குககள் எண்ணப்பட்டு வர... மேலும் பார்க்க