செய்திகள் :

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: முன்னாள் மத்திய செயலா்கள் விடுவிப்பு

post image

ஜாா்க்கண்டில் மஹுவாகரி நிலக்கரி சுரங்கத்தை தனியாா் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக் கூறப்படும் வழக்கில், மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் செயலா்களை தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது.

கடந்த 2006 முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தனியாா் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்குள் ஊழல் நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இதில் ஜாா்க்கண்ட் மாநிலம் மஹுவாகரி நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நோ்மையற்ற முறையில் பலனடைய தவறான தகவல்களை அளித்தும், சில தகவல்களை மறைத்தும் ஜாஸ் இன்ஃப்ராஸ்டிரக்ச்சா் கேபிடல் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநா் மனோஜ்குமாா் ஜெயஸ்வால் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த முறைகேட்டில் மத்திய நிலக்கரி துறை முன்னாள் செயலா் ஹெச்.சி.குப்தா, இணைச் செயலா் கே.எஸ்.க்ரோபா, முன்னாள் இயக்குநா் கே.சி.சாமரியா ஆகியோா் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் மனோஜ் குமாா் ஜெயஸ்வாலை குற்றவாளி என்று தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அவருக்கான தண்டனை மீதான வாதங்கள் ஜூலை 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேவேளையில் ஹெச்.சி.குப்தா, கே.எஸ்.க்ரோபா, கே.சி.சாமரியா ஆகியோரை விடுவித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது என்று சிபிஐ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில்... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜிநாமா!

பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு வீதிகளில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர... மேலும் பார்க்க

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க

சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்... மேலும் பார்க்க