தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: முன்னாள் மத்திய செயலா்கள் விடுவிப்பு
ஜாா்க்கண்டில் மஹுவாகரி நிலக்கரி சுரங்கத்தை தனியாா் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக் கூறப்படும் வழக்கில், மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் செயலா்களை தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது.
கடந்த 2006 முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தனியாா் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்குள் ஊழல் நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இதில் ஜாா்க்கண்ட் மாநிலம் மஹுவாகரி நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நோ்மையற்ற முறையில் பலனடைய தவறான தகவல்களை அளித்தும், சில தகவல்களை மறைத்தும் ஜாஸ் இன்ஃப்ராஸ்டிரக்ச்சா் கேபிடல் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநா் மனோஜ்குமாா் ஜெயஸ்வால் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த முறைகேட்டில் மத்திய நிலக்கரி துறை முன்னாள் செயலா் ஹெச்.சி.குப்தா, இணைச் செயலா் கே.எஸ்.க்ரோபா, முன்னாள் இயக்குநா் கே.சி.சாமரியா ஆகியோா் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் மனோஜ் குமாா் ஜெயஸ்வாலை குற்றவாளி என்று தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அவருக்கான தண்டனை மீதான வாதங்கள் ஜூலை 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேவேளையில் ஹெச்.சி.குப்தா, கே.எஸ்.க்ரோபா, கே.சி.சாமரியா ஆகியோரை விடுவித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது என்று சிபிஐ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.