செய்திகள் :

நீடூரில் வெட்டப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை

post image

மயிலாடுதுறை: நீடூரில் மர்மநபர்களால் பட்டாக்கத்தியால் வெட்டப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்த நிலையில், தப்பியோடிய இரண்டு பேரை போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை தாலுகா நீடூர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஹாலிக்(36). சமையலரான இவர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நீடூரில் மரத்தடியில் அமர்ந்து நண்பர்கள் இருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவர் இறங்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகமது ஹாலிக்கை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில், முகம் மற்றும் கையில் பலத்த காயமடைந்த முகமது ஹாலிக்கை பொதுமக்கள் மீட்டு அவசர ஊர்தியில் ஏற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

முகமது ஹாலிக்கை மர்மநபர் கத்தியால் வெட்டும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த பதிவினை ஆதாரமாகக் கொண்டு மர்மநபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, கும்பகோணத்தில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முகமது ஹாலிக் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

இந்நிலையில், குற்றவாளியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட சுகாதார மையங்களில் பல்வேறு வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

திரையுலகில் நீண்ட காலமாக போதைப்பொருள் பழக்கம் இருக்கிறது: விஜய் ஆண்டனி

மதுரை: திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. புகைப்பிடிப்பதும் போதைப் பழக்கம்தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைப்பொருள் பயன்பாடு என இசையமைப்பாளர் விஜய்... மேலும் பார்க்க

இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்!

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகரான பாலமுருகன்(30) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், திருப்பூர் குமாரானந்தபுரம் காமராஜர் வீதில் வசித்த... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில்கள் தாமதம்: காரணம் என்ன?

சென்னை கோயம்பேடு-அசோக் நகர் மெட்ரோ வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் மக்கள் தொகை பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து புதன்கிழமை காலை (ஜூன் 25) வினாடிக்கு 7,815 கன அடியாக சரிந்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த... மேலும் பார்க்க

வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம்!: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முன்னாள் பிரதமா் வி.பி.சிங் பிறந்த நாளையொட்டி, வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கோவை உள்பட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூன் 24 முதல் ஜூன்... மேலும் பார்க்க