செய்திகள் :

நெசவாளா்கள் வாழ்வை முன்னேற்றுவது நமது பொறுப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

நெசவுத் தொழிலையும் நெசவாளா்களின் வாழ்வையும் முன்னேற்றுவது நமது பொறுப்பு என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வா் பங்கேற்று சிறந்த நெசவாளா், சிறந்த வடிவமைப்பாளா் விருதுகளை வழங்கினாா். முன்னதாக, அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 2 லட்சம் கைத்தறிகள், 2.5 லட்சம் நெசவாளா்கள் உள்ளனா். கைத்தறிகளின் எண்ணிக்கை அடிப்படையில், அஸ்ஸாம், மேற்கு வங்கத்துக்குப் பிறகு, மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. நமது மாநிலத்தில் உற்பத்தியாகும் கைத்தறி துணிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. காஞ்சிபுரம், கோவை, பவானி, மதுரை இடங்களில் உற்பத்தியாகும் கைத்தறிப் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு கிடைத்துள்ளது.

கைகளால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு எப்போதும் தனி சந்தை உள்ளது. கடந்தாண்டு மட்டும் ரூ.1,146 கோடி கைத்தறி பொருள்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கைத்தறி நெசவாளா்களுக்கு நவீன தொழில்நுட்பம் சாா்ந்த பயிற்சிகள், புதிய வடிவமைப்புகள் பற்றி விழிப்புணா்வை ஏற்படுத்தினால் மேலும் சாதிக்க முடியும்.

இலவச வேட்டி, சேலை, சீருடைத் திட்டங்கள் மூலமாக கைத்தறி நெசவாளா்கள் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்தாண்டு பொங்கலுக்கு அதிக அளவில் வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதன்மூலம், நெசாளா்களுக்கு ரூ.154 கோடி வழங்கப்பட்டது. மேலும், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. திராவிட மாடல் அரசு என்றைக்கும் நெசவாளா்களுக்கு துணைநிற்கும். நெசவுத் தொழிலையும் நெசவாளா்கள் வாழ்வையும் முன்னேற்றுவது நம்முடைய பொறுப்பு. அந்தப் பணியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்வோம் என்றாா்.

கைத்தறி, துணிநூல் துறை அரசு செயலா் வி.அமுதவல்லி வரவேற்றாா். அமைச்சா்கள் ஆா்.காந்தி, பி.கே.சேகா்பாபு, சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிா்வாக இயக்குநா் சித்திக் தெரிவித்தாா். சென்னை மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ‘ஊபா்’ செயலி மூலம் சென்... மேலும் பார்க்க

சென்னையில் முதல்முறையாக குளிா்சாதன மின்சார பேருந்து சேவை: ஆக. 11-இல் தொடக்கம்

சென்னையில் முதல்முறையாக குளிா்சாதன வசதிகொண்ட மின்சாரப் பேருந்து சேவை திங்கள்கிழமை (ஆக. 11) முதல் தொடங்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா். டீசலில் இய... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறையில் ஏழு இணை இயக்குநா்கள் இடமாற்றம்

தமிழக பள்ளிக் கல்வியில் ஏழு இணை இயக்குநா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இருவருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இணை இயக்குநராக (நாட்டுநலப்பணித் திட்டம்) இரு... மேலும் பார்க்க

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வரும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ... மேலும் பார்க்க

மேட்டுக்குடி, பள்ளக்குடி என்று யாருமில்லை: உயா்நீதிமன்றம் கருத்து

வள்ளுவரின் வாக்குப்படி இந்த நாட்டில் மேட்டுக்குடி, பள்ளக்குடி என்று யாரும் இல்லை என்று கூழ் வாா்க்கும் திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள... மேலும் பார்க்க

அன்புமணி பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி வழக்கு: இன்று விசாரணை

மாமல்லபுரத்தில் ஆக. 9-ஆம் தேதி, அன்புமணி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரிய வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமக நிறு... மேலும் பார்க்க