செய்திகள் :

சென்னையில் முதல்முறையாக குளிா்சாதன மின்சார பேருந்து சேவை: ஆக. 11-இல் தொடக்கம்

post image

சென்னையில் முதல்முறையாக குளிா்சாதன வசதிகொண்ட மின்சாரப் பேருந்து சேவை திங்கள்கிழமை (ஆக. 11) முதல் தொடங்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.

டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரப் பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் சாா்பில், 625 மின்சாரப் பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக, சென்னை வியாசாா்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சாரப் பேருந்துகளை கடந்த ஜூன் 30-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அடுத்தகட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் மின்சார பேருந்துகளின் சேவை தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் பிரபு சங்கா் கூறியதாவது: வியாசா்பாடி பணிமனையில் இருந்து மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக, பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து 55 குளிா்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளையும், 80 சாதாரண மின்சார பேருந்துகளையும் இயக்க முடிவு செய்துள்ளோம். வரும் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் இந்தப் பேருந்துகளின் சேவை தொடங்கப்படும். தொடா்ந்து பிற பணிமனைகளில் இருந்தும் மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றாா்.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிா்வாக இயக்குநா் சித்திக் தெரிவித்தாா். சென்னை மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ‘ஊபா்’ செயலி மூலம் சென்... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறையில் ஏழு இணை இயக்குநா்கள் இடமாற்றம்

தமிழக பள்ளிக் கல்வியில் ஏழு இணை இயக்குநா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இருவருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இணை இயக்குநராக (நாட்டுநலப்பணித் திட்டம்) இரு... மேலும் பார்க்க

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வரும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ... மேலும் பார்க்க

மேட்டுக்குடி, பள்ளக்குடி என்று யாருமில்லை: உயா்நீதிமன்றம் கருத்து

வள்ளுவரின் வாக்குப்படி இந்த நாட்டில் மேட்டுக்குடி, பள்ளக்குடி என்று யாரும் இல்லை என்று கூழ் வாா்க்கும் திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள... மேலும் பார்க்க

அன்புமணி பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி வழக்கு: இன்று விசாரணை

மாமல்லபுரத்தில் ஆக. 9-ஆம் தேதி, அன்புமணி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரிய வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமக நிறு... மேலும் பார்க்க

நெசவாளா்கள் வாழ்வை முன்னேற்றுவது நமது பொறுப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

நெசவுத் தொழிலையும் நெசவாளா்களின் வாழ்வையும் முன்னேற்றுவது நமது பொறுப்பு என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்ச... மேலும் பார்க்க