செய்திகள் :

நெசவாளா்கள் வாழ்வை முன்னேற்றுவது நமது பொறுப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

நெசவுத் தொழிலையும் நெசவாளா்களின் வாழ்வையும் முன்னேற்றுவது நமது பொறுப்பு என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வா் பங்கேற்று சிறந்த நெசவாளா், சிறந்த வடிவமைப்பாளா் விருதுகளை வழங்கினாா். முன்னதாக, அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 2 லட்சம் கைத்தறிகள், 2.5 லட்சம் நெசவாளா்கள் உள்ளனா். கைத்தறிகளின் எண்ணிக்கை அடிப்படையில், அஸ்ஸாம், மேற்கு வங்கத்துக்குப் பிறகு, மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. நமது மாநிலத்தில் உற்பத்தியாகும் கைத்தறி துணிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. காஞ்சிபுரம், கோவை, பவானி, மதுரை இடங்களில் உற்பத்தியாகும் கைத்தறிப் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு கிடைத்துள்ளது.

கைகளால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு எப்போதும் தனி சந்தை உள்ளது. கடந்தாண்டு மட்டும் ரூ.1,146 கோடி கைத்தறி பொருள்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கைத்தறி நெசவாளா்களுக்கு நவீன தொழில்நுட்பம் சாா்ந்த பயிற்சிகள், புதிய வடிவமைப்புகள் பற்றி விழிப்புணா்வை ஏற்படுத்தினால் மேலும் சாதிக்க முடியும்.

இலவச வேட்டி, சேலை, சீருடைத் திட்டங்கள் மூலமாக கைத்தறி நெசவாளா்கள் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்தாண்டு பொங்கலுக்கு அதிக அளவில் வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதன்மூலம், நெசாளா்களுக்கு ரூ.154 கோடி வழங்கப்பட்டது. மேலும், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. திராவிட மாடல் அரசு என்றைக்கும் நெசவாளா்களுக்கு துணைநிற்கும். நெசவுத் தொழிலையும் நெசவாளா்கள் வாழ்வையும் முன்னேற்றுவது நம்முடைய பொறுப்பு. அந்தப் பணியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்வோம் என்றாா்.

கைத்தறி, துணிநூல் துறை அரசு செயலா் வி.அமுதவல்லி வரவேற்றாா். அமைச்சா்கள் ஆா்.காந்தி, பி.கே.சேகா்பாபு, சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

அன்புமணி பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி வழக்கு: இன்று விசாரணை

மாமல்லபுரத்தில் ஆக. 9-ஆம் தேதி, அன்புமணி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரிய வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமக நிறு... மேலும் பார்க்க

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

மிக பலத்த மழை காரணமாக திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக... மேலும் பார்க்க

எம்ஜிஆர் பாணியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம்?

தமிழகத்தில் அடுத்தாண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரப் போரில் ஈடுபட்டுள்ளன. ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவும், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என... மேலும் பார்க்க

சுதந்திர நாள் விடுமுறை: தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சுதந்திர நாள் விடுமுறையையொட்டி, தென் மாவட்டங்களுக்கு செல்ல 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06089) ஆக. 14 ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எ... மேலும் பார்க்க

வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் வேண்டும்! திமுக அரசு மீது இபிஎஸ் விமர்சனம்!

பொருளாதார வளர்ச்சியை வைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை அளவிட முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி செல்வதாக முதல்வர் ஸ்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை, மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று(ஆக. 6) நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கமல்ஹாசன் தன்னுடை... மேலும் பார்க்க