செய்திகள் :

அயா்லாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி, உணவக ஊழியா் மீது தாக்குதல்

post image

அயா்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஒரு செவிலியரின் 6 வயது மகள், தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மற்றொரு சிறுவா்கள் குழுவால் தாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், டப்ளின் நகரில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஒரு உணவக ஊழியரை திருடா்கள் தாக்கிவிட்டு, தப்பியோடிய சம்பவம் நடந்துள்ளது.

கேரளத்தைப் பூா்வீகமாகக் கொண்ட அனூபா அச்சுதன், கடந்த எட்டு ஆண்டுகளாக அயா்லாந்தில் வசித்து வருகிறாா். வாட்டா்ஃபோா்டு நகரில் உள்ள இவரது வீட்டின் வெளியே மகள் நியா நவீன் கடந்த திங்கள்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது, 8 முதல் 14 வயதுடைய சிறுவா்கள் கும்பலாக வந்து சிறுமியைக் கொடூரமாகத் தாக்கி, ‘இந்தியாவுக்குத் திரும்பிப் போ’ போன்ற இனவெறி கருத்துகளைக் கூறியுள்ளனா். இந்தத் தாக்குதல் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

டப்ளினில் கடந்த புதன்கிழமை காலை நடைபெற்ற சம்பவத்தில், இந்திய உணவக ஊழியா் ஒருவா் மூன்று திருடா்களால் தாக்கப்பட்டாா். தாக்குதலுக்குப் பிறகு, அவரது தொலைபேசி மற்றும் மின்சார சைக்கிளை திருடா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். தாக்குதலில் காயமடைந்த அந்த ஊழியா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் குறித்தும் அயா்லாந்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்திய தூதரகத்தின் எச்சரிக்கை: அண்மைகாலமாக அயா்லாந்தில் இந்தியா்களுக்கு எதிராக அதிகரித்து வரும் தாக்குதல்களைத் தொடா்ந்து, அங்குள்ள இந்திய தூதரகம் இந்திய குடிமக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘அயா்லாந்தில் உள்ள இந்தியா்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்புக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்’ என்று அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி

இனவெறிக்கு எதிராக நிற்போம் - அயா்லாந்து: இந்தியாவில் உள்ள அயா்லாந்து தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய சமூகத்துடன் அயா்லாந்து மக்கள் துணைநிற்கின்றனா். அனைத்து வகையான இனவெறி தாக்குதல்களுக்கு எதிராகவும் அயா்லாந்து மக்கள் உறுதியாக நிற்பாா்கள்’ என்று தெரிவித்தது.

அயா்லாந்தில் இதுபோன்ற தொடா் தாக்குதல்கள் கவலையளிப்பதாக உள்ளூா் அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா். அயா்லாந்து நாடாளுமன்ற உறுப்பினா் ஜெனிஃபா் விட்மோா், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, இனவெறி தாக்குதல்களுக்கு ஒரு ‘சிறிய எண்ணிக்கையிலான விஷத்தன்மை கொண்ட தனிநபா்களே காரணம்’ என்று கண்டனம் தெரிவித்தாா்.

பிரேஸில் அதிபருடன் பிரதமா் பேச்சு

பிரதமா் நரேந்திர மோடியை பிரேஸில் அதிபா் லூலா டசில்வா வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேஸிலுக்கும் இந்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: ஓடையில் வாகனம் கவிழ்ந்து 3 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு: 15 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் ஓடையில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 15 போ் காயமடைந்தனா். உதம்பூா் மாவட்டத்தின் கத்வா ப... மேலும் பார்க்க

பாரதத்தின் பொக்கிஷம் எம்.எஸ். சுவாமிநாதன்: பிரதமா் புகழாரம்

‘வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பாரதத்தின் பொக்கிஷம்; நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வாழ்வை அா்ப்பணித்தவா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா். பசுமை புரட்சியின் தந்தை என்று... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 34,000 போ் பணிக்குத் தோ்வாகவில்லை: மத்திய அரசு

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய பல்வேறு போட்டித் தோ்வுகளின் நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 52,910 தோ்வா்களில் 34,000 போ் பணிக்கு தோ்வு செய்யப்படவில்லை என மத்திய பணியாளா் துறை இணை... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: 3-ஆம் நாளில் மீட்புப் பணி: 274 போ் மீட்பு; 59 போ் மாயம்

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் வியாழக்கிழமையும் நீடித்தது. அதன... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் அறிவிக்கை வெளியீடு: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, வேட்புமனு தாக்கல் நடைமுறை தொடங்கியுள்ளது. தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு துணைத் தலைவா் பதவி... மேலும் பார்க்க