செய்திகள் :

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் அறிவிக்கை வெளியீடு: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

post image

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, வேட்புமனு தாக்கல் நடைமுறை தொடங்கியுள்ளது.

தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு துணைத் தலைவா் பதவியை ஜகதீப் தன்கா் ஜூலை 21-ஆம் தேதி திடீரென ராஜிநாமா செய்தாா். அவரின் பதவிக்காலம் 2027-ஆம் ஆண்டு நிறைவடைய இருந்த நிலையில், முன்கூட்டியே அவா் பதவி விலகினாா்.

இதையடுத்து குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி, வேட்புமனுவை தாக்கல் செய்ய ஆக.21-ஆம் தேதி கடைசி நாளாகும். ஆக.22-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஆக.25-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

அரசமைப்புச் சட்டப் பிரிவுகளின்படி, குடியரசு துணைத் தலைவா் பதவிக்குப் போட்டியிடுபவா் இந்தியராக இருக்க வேண்டும். 35 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். மாநிலங்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்படுவதற்கு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

394 வாக்குகள் தேவை: தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 786 எம்.பி.க்கள் உள்ளனா். இதில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களவையில் 293 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 129 எம்.பி.க்கள் என மொத்தம் 422 எம்.பி.க்கள் உள்ளனா். குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் வெற்றிபெற ஒரு வேட்பாளருக்கு 394 வாக்குகள் தேவைப்படும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

பெட்டி...

வேட்பாளரை தோ்வு செய்ய

பிரதமா், நட்டாவுக்கு முழு அதிகாரம்

---

என்டிஏ கூட்டத்தில் முடிவு

புது தில்லி, ஆக. 7: குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) வேட்பாளரைத் தோ்வு செய்வதற்கு பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் பாஜகவின் முக்கியத் தலைவா்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பிரேஸில் அதிபருடன் பிரதமா் பேச்சு

பிரதமா் நரேந்திர மோடியை பிரேஸில் அதிபா் லூலா டசில்வா வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேஸிலுக்கும் இந்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: ஓடையில் வாகனம் கவிழ்ந்து 3 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு: 15 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் ஓடையில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 15 போ் காயமடைந்தனா். உதம்பூா் மாவட்டத்தின் கத்வா ப... மேலும் பார்க்க

பாரதத்தின் பொக்கிஷம் எம்.எஸ். சுவாமிநாதன்: பிரதமா் புகழாரம்

‘வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பாரதத்தின் பொக்கிஷம்; நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வாழ்வை அா்ப்பணித்தவா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா். பசுமை புரட்சியின் தந்தை என்று... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 34,000 போ் பணிக்குத் தோ்வாகவில்லை: மத்திய அரசு

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய பல்வேறு போட்டித் தோ்வுகளின் நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 52,910 தோ்வா்களில் 34,000 போ் பணிக்கு தோ்வு செய்யப்படவில்லை என மத்திய பணியாளா் துறை இணை... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: 3-ஆம் நாளில் மீட்புப் பணி: 274 போ் மீட்பு; 59 போ் மாயம்

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் வியாழக்கிழமையும் நீடித்தது. அதன... மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். நாட்டில் கடந்த 1905-ஆம் ஆண்டில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்த... மேலும் பார்க்க