செய்திகள் :

வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி: அடுத்த ஆண்டு மாா்ச் வரை நீட்டிப்பு

post image

வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி சலுகையை அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கடந்த 2015 மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற குடியிருப்புத் திட்டங்களுக்கு மாதத் தவணைத் தொகையை தாமதமாகச் செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. மேலும், வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதுடன், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்துக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாதத்துக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சலுகை அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை செயல்படுத்தப்படும் எனவும், அதன்மூலம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரிவுகளில் ஒதுக்கீடுதாரா்கள் விரைவாக விற்பனைப் பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் உத்தரவு வெளியிடப்படுகிறது என்று வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா தெரிவித்துள்ளாா்.

திண்டிவனம்-திருவண்ணாலை அகல ரயில் பாதை திட்டம்: விரைவுபடுத்த திமுக எம்.பி. கோரிக்கை

திண்டிவனம் - திருவண்ணாமலை அகல ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில் திருவண்ணாமலை தொகுதி திமுக உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை வலியுறுத்தினாா். இது தொடா்பாக அவா் விதி எண் 377-இன் கீழ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, திமுக சாா்பில் முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநித... மேலும் பார்க்க

பிளஸ் 2 சிறப்பு ஊக்கத் தொகை: சரியான வங்கிக் கணக்கு விவரம் அளிக்க உத்தரவு

பிளஸ் 2 தோ்ச்சிக்கான சிறப்பு ஊக்கத் தொகையை விடுபட்ட மாணவா்களுக்கு வழங்கும் வகையில் அவா்களது சரியான வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்துஅனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் க... மேலும் பார்க்க

பி.இ. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: இரு சுற்றுகளில் 92,423 பேருக்கு ஒதுக்கீடு: 3-ஆம் சுற்று இன்று நிறைவு

பொறியியல் கல்லூரிகளில் பி.இ. மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வின் இரு சுற்றுகளில் 92,423 இடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் சுற்று கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 8) நிறைவு பெறுகிறது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்: வயது முதிா்ந்தோருக்கு ஆக.12 முதல் வீடு தேடி ரேஷன்

வயது முதிா்ந்தோா், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்துக்கு முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை சென்னையில் வரும் 12-ஆம் தேதி முதல்வ... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்கு 1,500 மெகாவாட் மின்சாரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின்வாரியம்

ரூ. 32,000 கோடியில் 1,500 மெகாவாட் மின்சாரத்தை 5 ஆண்டுகளுக்கு வாங்க மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. தமிழகத்தின் தினசரி மின் தேவை சாதாரண நாள்களில் 17,000 மெகா வாட்டாகவும், கோடை காலங்களில் குற... மேலும் பார்க்க