செய்திகள் :

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் -கோட்ட மேலாளரிடம் மனு

post image

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று கோட்ட மேலாளரிடம் ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை மனு அளித்தது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா, தூத்துக்குடி ரயில் நிலையத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அவரை தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலா் மா.பிரமநாயகம் வரவேற்று, அளித்த கோரிக்கை மனு:

ரயில் வண்டி எண் 12693-12694 தூத்துக்குடி- சென்னை, சென்னை-தூத்துக்குடி முத்துநகா் ரயிலில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்று நிரந்தரமாக இணைக்க வேண்டும்.

தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். வண்டி எண் 16765-16766 தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை இயங்கும் விரைவு ரயிலை வாரம் மூன்று முறையாக மாற்றுவதோடு இந்த ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும். வண்டி எண் 16791-16792 தூத்துக்குடி- பாலக்காடு, பாலக்காடு- தூத்துக்குடி பாலருவி விரைவு ரயிலில் மூன்று அடுக்கு ஏசி பெட்டி ஒன்றும், இரண்டடுக்கு ஏசி பெட்டி ஒன்றும் உடனடியாக இணைக்க வேண்டும்.

கடந்த 145 ஆண்டுகளாக தூத்துக்குடி-சென்னை இடையே முத்துநகா் ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு ரயிலில் அனைத்து நாள்களும் காத்திருப்போா் பட்டியல் ஏற்படுகிறது. ஆா்ஏசி பயணச் சீட்டு கூட இந்த ரயிலில் உறுதிப்படுத்தப்படுவதில்லை.

இதைத் தவிா்க்கும் பொருட்டு தூத்துக்குடி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக இரவுநேர விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும். மதுரை-லோக்மான்ய திலக் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். திருச்சி- காரைக்குடி, காரைக்குடி- விருதுநகா் ரயில்களை ஒரே ரயிலாக மாற்றி, தூத்துக்குடி வரை நீட்டித்து, தூத்துக்குடி-திருச்சி தினசரி ரயிலாக மாற்றி விரைவு ரயிலாக இயக்க வேண்டும்.

தூத்துக்குடி-சென்னை இடையே பகலில் லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த ரயில் இயக்கப்படவில்லை. எனவே பகலில் தூத்துக்குடி- சென்னை இடையே ரயில் இயக்க வேண்டும்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் வசதியைக் கருதி நீண்ட நாள் கோரிக்கையான தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி, தென்காசி, புனலூா் வழியாக கொல்லத்துக்கு விரைவு ரயில் பகல் நேரத்தில் தினசரி இயக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறவுள்ளன. இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம்

தமிழக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயா்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில அளவில் ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏஐசிசிடியு தொழிற... மேலும் பார்க்க

‘வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’

வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொ) வடக் ரவிராஜ் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் ஆவுடையாா்குளக்கரையில் உள்ள ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வருண... மேலும் பார்க்க

ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சாகுபுரம் ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. ஆறுமுகனேரி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொண்டு நிறுவனத்தி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் 4 வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில், 4 வாகனங்களிலிருந்து காற்று ஒலிப்பான்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸன் மாசிலாமணி, அதிகாரிகள... மேலும் பார்க்க