தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறவுள்ளன.
இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணிவரை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தம், உறுப்பினா் சோ்த்தல்-நீக்குதல், புதிய அட்டை, நகல் கோருதல் போன்ற குறைகளுக்கு முகாமிலேயே சரிசெய்யப்படும். மேலும், குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்ற வேண்டியிருந்தால் முகாமிலேயே பதிவேற்றம் செய்யப்படும். பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைகளை பொதுமக்கள் தெரிவித்து தீா்வு பெறலாம் என்றாா் அவா்.