செய்திகள் :

``கட்சியை கலைத்து விட்டு திமுகவில் இணைந்து விடலாம்'' - கம்யூனிஸ்ட் கட்சி மீது எடப்பாடி விமர்சனம்

post image

அதிமுகவின் சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கின்ற பிரச்சார பயணத்தில் அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், "திமுக கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி. அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் தனது கட்சியின் கொள்கைகளை மறந்து திமுக கட்சி போல் செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு பதிலாக கட்சியை கலைத்து விட்டு திமுகவில் இணைந்து விடலாம்.

இபிஎஸ் சுற்றுப்பயணம்

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன் கேட்கிறார், அதிமுகவிற்கு என்ன கொள்கை இருக்கிறது என்று. கொள்கை இருப்பதால்தான் ஒரு அசைக்க முடியாத கட்சியாக அதிமுக திகழ்ந்து வருகிறது. எங்களின் கொள்கை வேறு கூட்டணி வேறு என்பதை பலமுறை நாங்கள் எடுத்துக் கூறியிருக்கிறோம்.

கம்யூனிஸ்ட் கட்சிக்கென கொள்கை இருந்தது, தற்போது அது காற்றோடு காற்றாக கரைந்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு நல்ல எண்ணத்தில் உங்களுக்கான கருத்துக்களை நாங்கள் சொல்கிறோம். திமுகவுடன் கூட்டணி அமைத்த பின்பு கம்யூனிஸ்ட் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக திமுக விழுந்துகிறது.

கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்கட்சியாக இருந்து மக்களுடைய பிரச்னைகளை முதல்வருக்கு கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால் ஒருமுறை கூட திமுக ஆட்சியை எதிர்த்து அவர்கள் குரல் கொடுக்கவில்லை.

சட்டமன்றத்திலும் மக்களுக்காக திமுகவை அவர்கள் கேள்வி கேட்கவில்லை. ஆவணக் கொலை குறித்து தனி சட்டம் கொண்டுவர முதல்வரிடம் பேச வேண்டிய கூட்டணிக் கட்சிகளே, இது பற்றி பேசலாமா, வேண்டாமா என முதல்வரிடம் அனுமதி கேட்கிறார்கள்.

திமுகவில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நிலை இப்படி இருக்கிறது. இந்த ஆட்சியில் நடைபெறும் அவலங்களை நாங்கள் சுட்டிக் காட்டும் பொழுது திமுகவை விட அதன் கூட்டணி கட்சிகளே அதிகமாக பொங்கி எழுகிறது.

இபிஎஸ் சுற்றுப்பயணம்

உங்களுடன் ஸ்டாலின் என்கின்ற திட்டத்தை தற்போது துவங்கி உள்ளார். 4 ஆண்டு காலமாக 46 குறைகள் இருப்பது தெரியாமல் தற்போது தான் அவருக்கு தெரிந்ததா?. மக்களுக்காக பணிகளைச் செய்யாமல் கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருந்தாரா?. நான்கு காலத்தில் தனது அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையை வைத்து மக்களுக்கான பிரச்னைகளை தீர்த்து இருந்தால் இந்த 46 குறைகள் எப்படி வந்திருக்கும் என கேள்வி எழுப்பினார்.

பட்டாசு தொழிலுக்கு எதிராக தனிநபர் கொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் வரை சென்று சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வெற்றி பெற்றது அதிமுக ஆட்சியில் தான்.

பட்டாசு தொழிலாளர்களை மட்டுமல்ல உழைக்கும் மக்களை காக்கும் ஒரே அரசாக அதிமுக திகழ்ந்தது. அதிமுக ஆட்சியின் போது இந்திய அளவில் துறை சார்ந்த பணிகளுக்காக 140 விருதுகளை பெற்றோம். அதுவே தற்போது இருக்கக்கூடிய அரசு ஊழல் செய்வதில் தான் விடுதலை பெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு தனியாக 10 வாக்குறுதிகளை தந்து ஆட்சிக்கு வந்த இந்த அரசு பத்தியில் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை என உரையாற்றினார்.

``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரிக்கை

மகாராஷ்டிராவில் அக்டோபர் அல்லது நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் மும்பை மாநகராட்சியை எப்படியும் பிடித்துவிடவேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. இதற்காக ஏற்கெனவே தேர்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: எடப்பாடி பிரசாரத்தில் பிக்பாக்கெட்; கூட்டத்தில் பணத்தை இழந்த அதிமுகவினர் கவலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் எடப்பாடி பிரசாரம்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.இரண்டாம் கட்ட சுற... மேலும் பார்க்க

`மழை வெள்ளம் வந்து’ - காணாமல் போன 4,000 டன் நிலக்கரி குறித்து அமைச்சர் சொன்ன பகீர் பதில்

மேகாலயாவில் உள்ள டியன்கன் மற்றும் ராஜாஜு ஆகிய கிராமங்களில் இருந்த நிலக்கரி குடோனில் 4,000 டன் நிலக்கரியை சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலக்கரி சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்... மேலும் பார்க்க

மராத்தி பேசாதவர்களை அடித்து உதைக்கும் ராஜ் தாக்கரே கட்சி.. நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன்?

மராத்தி பேசாதவர்கள் மீது தாக்குதல்..மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தியில் பேச வேண்டும் என்று கூறி வருகிறார். இதற்காக அவரது கட்சி தொண்டர்கள்... மேலும் பார்க்க

``அதிமுக -பாஜக கூட்டணியில் விஜய், சீமான் இணையலாம்; ஆனால்..'' - பாஜக ராம சீனிவாசன் சொல்வதென்ன?

திண்டுக்கல், நத்தம் சாலையில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, "திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டியில் இரு தரப்பினரிடையே கடந... மேலும் பார்க்க

``திமுக `பாடி போன லாரி, டயர் போன பேருந்து' வண்டி ஓடாது..'' - ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

ராஜபாளையத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 7 அன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ... மேலும் பார்க்க