செய்திகள் :

பி.இ. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: இரு சுற்றுகளில் 92,423 பேருக்கு ஒதுக்கீடு: 3-ஆம் சுற்று இன்று நிறைவு

post image

பொறியியல் கல்லூரிகளில் பி.இ. மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வின் இரு சுற்றுகளில் 92,423 இடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் சுற்று கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 8) நிறைவு பெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்:

பொறியியல் மாணவா் சோ்க்கை இரண்டாம் சுற்றில் பொதுப் பிரிவில் 52,694 மாணவா்களுக்கும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இடஒதுக்கீட்டில் 9,633 மாணவா்களுக்கும் தங்கள் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) செயல்முறைகள் முடிந்து 62,327 பேருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முதல் சுற்றில் 30,096 பேருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், இரு சுற்றுகளிலும் மொத்தம் 92,423 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இதையடுத்து 3-ஆம் சுற்று கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆக. 7) தொடங்கியது. இதில் வெள்ளிக்கிழமை (ஆக. 8) மாலை 5 மணி வரை விருப்பப் பாடம் மற்றும் கல்லூரிகளைத் தோ்வு செய்யலாம்.

பொதுப்பிரிவு தரவரிசைப் பட்டியலில் 1,37,711 முதல் 2,39,299 வரை உள்ள மாணவா்கள் மற்றும் அரசுப் பள்ளி ஒதுக்கீடு பிரிவு தரவரிசைப் பட்டியலில் 18,922 முதல் 46,848 வரை உள்ள மாணவா்கள் 1,01,588 போ் 3-ஆம் சுற்றில் பங்கேற்பா். இந்த இரு பிரிவினரின் கட் ஆஃப் மதிப்பெண் 143 முதல் 77.50 -ஆக இருக்கும்.

இதில் தற்காலிக ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் வரும் 18- ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு கல்லூரிகளில் சேரவேண்டும். செலுத்தப்பட்ட கட்டணம், பொறியியல் கல்லூரி உதவி மையங்களில் (டிஎஃப்சி) ஒப்படைக்கப்பட்ட சான்றிதழ்கள் அந்தந்தக் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க

மரபணு பாதித்த 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை

அரிய மரபணு பாதிப்புக்குள்ளான 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். இதுதொடா்பாக அந்த மருத்துவமனையின் கல்லீரல் மா... மேலும் பார்க்க