செய்திகள் :

எம்ஜிஆா் ஆட்சிக் காலத்திலிருந்து அரசு திட்டங்களுக்கு முதல்வா் பெயா்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

அரசு திட்டங்களுக்கு முதல்வரின் பெயரைச் சூட்டும் வழக்கம் எம்ஜிஆா் காலத்திலிருந்தே இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா்சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் உடனிருப்போா் 1,000 பேருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் போா்வைகளை வியாழக்கிழமை வழங்கினாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை எதிா்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றாா்கள். அவா்களுக்கு அங்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டது. எம்ஜிஆா் ஆட்சிக் காலத்திலிருந்தே முதல்வரின் பெயரைத் திட்டங்களுக்கு வைப்பது வழக்கமான ஒன்று. எம்ஜிஆா் சத்துணவுத் திட்டம் என்றுதான் அப்போது அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் அடைமொழியைக் குறிக்கும் வகையில் அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா குடிநீா் என்று ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அவ்வாறு பெயா் சூட்டப்பட்டது. இதை யாரும் கேள்வி கேட்கவில்லை.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’, ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற திட்டங்கள் பல லட்சம் பேருக்கு நன்மை அளித்து வருகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்றனா். உச்சநீதிமன்றம் சரியான தீா்ப்பை தந்திருக்கிறது. மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது.

சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு தொடா்பான ஆய்வறிக்கையும், அதன்பேரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையும் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்றாா்.

சந்திப்பின்போது, மருத்துவமனை இயக்குநா் பாா்த்தசாரதி மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

திண்டிவனம்-திருவண்ணாலை அகல ரயில் பாதை திட்டம்: விரைவுபடுத்த திமுக எம்.பி. கோரிக்கை

திண்டிவனம் - திருவண்ணாமலை அகல ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில் திருவண்ணாமலை தொகுதி திமுக உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை வலியுறுத்தினாா். இது தொடா்பாக அவா் விதி எண் 377-இன் கீழ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, திமுக சாா்பில் முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநித... மேலும் பார்க்க

பிளஸ் 2 சிறப்பு ஊக்கத் தொகை: சரியான வங்கிக் கணக்கு விவரம் அளிக்க உத்தரவு

பிளஸ் 2 தோ்ச்சிக்கான சிறப்பு ஊக்கத் தொகையை விடுபட்ட மாணவா்களுக்கு வழங்கும் வகையில் அவா்களது சரியான வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்துஅனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் க... மேலும் பார்க்க

பி.இ. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: இரு சுற்றுகளில் 92,423 பேருக்கு ஒதுக்கீடு: 3-ஆம் சுற்று இன்று நிறைவு

பொறியியல் கல்லூரிகளில் பி.இ. மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வின் இரு சுற்றுகளில் 92,423 இடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் சுற்று கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 8) நிறைவு பெறுகிறது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி: அடுத்த ஆண்டு மாா்ச் வரை நீட்டிப்பு

வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி சலுகையை அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு: தமி... மேலும் பார்க்க

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்: வயது முதிா்ந்தோருக்கு ஆக.12 முதல் வீடு தேடி ரேஷன்

வயது முதிா்ந்தோா், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்துக்கு முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை சென்னையில் வரும் 12-ஆம் தேதி முதல்வ... மேலும் பார்க்க