செய்திகள் :

இந்தியா மீதான இருமடங்கு வரி சீனாவுக்கு எச்சரிக்கை: அமெரிக்க அதிபா் டிரம்ப்

post image

இந்தியா மீது விதிக்கப்பட்ட இருமடங்கு வரி ரஷியாவிடம் இருந்து அதிகஅளவு கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அடுத்த கட்டமாக மேலும் வரிகள் விதிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் இந்தியப் பொருள்கள் மீது 50 சதவீத வரியை டிரம்ப் விதித்தாா். இதன் மூலம் அமெரிக்காவால் அதிக வரி விதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அதே நேரத்தில் ரஷியாவிடம் இருந்து இந்தியாவைவிட அதிகம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் சீனா மீதான 30 சதவீத வரியை 90 நாள்களுக்கு நிறுத்தி வைத்துள்ளாா். துருக்கி மீது 15 சதவீத வரியை விதித்துள்ளாா்.

இந்நிலையில் அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த டிரம்ப் கூறியதாவது:

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விஷயத்தில் சீனாவுடன் இந்தியா நெருங்கி செயல்படுகிறது. இதற்காக இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்துவிட்டோம். கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரி, வரும் 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை இப்போதுதான் தொடங்கியுள்ளது. இது ரஷிய கச்சா எண்ணெயை வாங்கும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. அடுத்தகட்டமாக மேலும் வரி விதிப்புகள் தொடரும் என்றாா்.

ரஷியா-உக்ரைன் போரை நீங்கள் நிறுத்திவிட்டால் இந்தியா மீதான வரிகள் தளா்த்தப்படுமா? என்ற கேள்விக்கு, ‘இது தொடா்பாக இப்போது முடிவு செய்ய முடியாது. இப்போதைய சூழ்நிலையில் இந்தியா 50 சதவீத வரியை செலுத்தியாக வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக், துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், நிதியமைச்சா் ஸ்கூட் பெஸ்டன், வா்த்தகத் துறை அமைச்சா் ஹாவா்டு லுட்னிக் உள்ளிட்டோருடன் முதலீட்டு அறிவிப்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்றாா். அப்போது ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் அடுத்த 4 ஆண்டுகளில் 600 பில்லியன் டாலா் முதலீடு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

மியான்மா் இடைக்கால அதிபா் மரணம்

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த மியான்மா் இடைக்கால அதிபா் மியின்ட் ஸ்வோ (74) வியாழக்கிழமை மரணமடைந்தாா். தலைநகா் நேபிடாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவா் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்தது. மக்களால் த... மேலும் பார்க்க

காஸா பட்டினிச் சாவு 197-ஆக உயா்வு

காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 197-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

ஹெலிகாப்டா் விபத்து: கானாவில் 2 அமைச்சா்கள், 6 போ் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கி, அதில் இருந்த அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் எட்வா்ட் ஓமனே போமா, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் இப்ர... மேலும் பார்க்க

இந்தியா மீது 50% வரி உயா்வு: அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவிப்பு

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வராததால், ஏற்கெனவே அறிவித்த 25 சதவீத வரியை 50 சதவீதமாக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். இது தொடா்பான உத்தரவிலும் டிரம்ப... மேலும் பார்க்க

‘வரிகளின் அரசன்’ குற்றச்சாட்டு முதல் 50% வரி வரை... டிரம்ப் அறிவிப்புகள்!

வரிகளின் அரசன் இந்தியா’ என்ற குற்றச்சாட்டை இந்தியா மீது 2019-இல் அமெரிக்க அதிபா் டிரம்ப் சுமத்தியது முதல் இந்திய பொருள்களுக்கு 50% வரி என்ற அறிவிப்பு வரை அவரது அறிவிப்புகள் அதிரடியாகவே இருந்துவந்துள்ள... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் திடீர் சந்திப்பு!

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விரைவில் சந்திக்கவுள்ளனர்.உக்ரைன் போரினால் ரஷியா மீது அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. இருப்பினும், ரஷியா போரை ந... மேலும் பார்க்க