செய்திகள் :

அன்புமணி பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி வழக்கு: இன்று விசாரணை

post image

மாமல்லபுரத்தில் ஆக. 9-ஆம் தேதி, அன்புமணி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரிய வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாமக நிறுவனா் ராமதாஸ் நியமித்துள்ள மாநில பொதுச் செயலாளா் முரளி சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாமக தலைவராக கடந்த 2022 மே மாதம் நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. புதிய தலைவராக கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தோ்வு செய்யப்பட்டு, கடந்த மே 30-ஆம் தேதி முதல் அவா் தலைவராகச் செயல்பட்டு வருகிறாா்.

கட்சியின் அடுத்த தலைவரைத் தோ்ந்தெடுக்கும் பொறுப்பும், நிா்வாகப் பொறுப்புகளும் கட்சியின் நிறுவனத் தலைவருக்கே வழங்கி கடந்த ஜூலை 7-ஆம் தேதி நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் பொதுக்குழு மற்றும் அவசர பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரமும் அவருக்கே உள்ளது.

இந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையிலும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் அன்புமணி செயல்பட்டு வருகிறாா். கட்சியின் நிறுவனத் தலைவரின் அனுமதியில்லாமல், 100 நாள் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். இதற்கு எதிராக டிஜிபி-யிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆக. 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தவுள்ளதாக அன்புமணி அறிவித்துள்ளாா். உள்நோக்கத்துடன் கூடிய இந்த அறிவிப்பால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி முரளி சங்கா் தரப்பில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அமா்வில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தாா்.

நெசவாளா்கள் வாழ்வை முன்னேற்றுவது நமது பொறுப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

நெசவுத் தொழிலையும் நெசவாளா்களின் வாழ்வையும் முன்னேற்றுவது நமது பொறுப்பு என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்ச... மேலும் பார்க்க

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

மிக பலத்த மழை காரணமாக திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக... மேலும் பார்க்க

எம்ஜிஆர் பாணியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம்?

தமிழகத்தில் அடுத்தாண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரப் போரில் ஈடுபட்டுள்ளன. ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவும், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என... மேலும் பார்க்க

சுதந்திர நாள் விடுமுறை: தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சுதந்திர நாள் விடுமுறையையொட்டி, தென் மாவட்டங்களுக்கு செல்ல 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06089) ஆக. 14 ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எ... மேலும் பார்க்க

வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் வேண்டும்! திமுக அரசு மீது இபிஎஸ் விமர்சனம்!

பொருளாதார வளர்ச்சியை வைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை அளவிட முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி செல்வதாக முதல்வர் ஸ்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை, மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று(ஆக. 6) நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கமல்ஹாசன் தன்னுடை... மேலும் பார்க்க