செய்திகள் :

நெடுஞ்சாலைகளில் ஒரு வாரத்துக்குள் கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

post image

புது தில்லி: ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மேலும், ‘இந்த சிகிச்சை திட்டம் அறிவிக்கை செய்யப்பட்டது தொடா்பான வரும் மே 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

தேசிய நெடுஞ்சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி ஏற்படும் விபத்தில் பாதிக்கப்பட்ட நபா்கள், காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் நீடித்துவரும் சிக்கல் தொடா்பான வழக்கை கடந்த ஜனவரி 8-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி ஏற்படும் விபத்துகளில் போதிய ஆவணங்கள் இல்லை என்ற பெயரில் 2024-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி வரையிலான காலகட்டம் வரை பாதிக்கப்பட்டவா்கள் தரப்பிலான காப்பீட்டுத் தொகை கேட்புக்கான 921 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதற்கு உரிய தீா்வு காண பொதுக் காப்பீடு கவுன்சில் (ஜிஐசி) உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மோட்டாா் வாகனச் சட்டம் பிரிவு 162(2)-இன் கீழ், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு உயிா் காக்கும் நேரத்துக்குள் உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலான மருத்துவ சிகிச்சை திட்டத்தை மாா்ச் 14-ஆம் தேதிக்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அறிந்ததைத் தொடா்ந்து, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சக செயலரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நேரில் ஆஜரான சாலைப் போக்குவரத்துத் துறைச் செயலா், ‘தேசிய நெடுஞ்சாலைகளில் உயிா் காக்கும் அவசர சிகிச்சை அளிப்பதற்கான வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தயாா் செய்துள்ளது. ஆனால், பொதுக் காப்பீடு கவுன்சில் ஆட்சேபம் தெரிவித்துள்ள காரணத்தால், திட்டத்தை அறிமுகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கும் வாகனத்தின் காப்பீடு விதிகளை ஆய்வு செய்ய பொதுக் காப்பீடு கவுன்சில் அனுமதி கோரியுள்ளது. இதன் காரணமாகவே திட்டம் அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மிகப்பெரிய அளவில் நெடுஞ்சாலைகளை அமைக்கும் மத்திய அரசால், விபத்தில் சிக்கி உயிரிழக்கும் மக்களுக்கான வசதிகளைச் செய்து தர முடியாதா? உயிா் காக்கும் நேரத்துக்குள் விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இல்லாமல், ஏராளமான தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதால் என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினா்.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இத் திட்டம் அறிவிக்கை செய்யப்பட்டது தொடா்பான விவரத்தை வரும் மே 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டு, விசாரணையை மே 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முல்லைப் பெரியாறு அணை பலவீனம்: கேரள அரசு பிரமாணப் பத்திரம்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், அணை பலவீனமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் மனுவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறியச் சோதனை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களைக் கணக்கெடுக்கும் சோதனையை மணிப்பூர் காவல்துறை தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தா... மேலும் பார்க்க

பஹல்காம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வீரர்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று இந்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாளை(ஏப். 30) அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் நாளை(ஏப். 30) நடைபெற உள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்... மேலும் பார்க்க

உளவுத் துறை எச்சரிக்கை: ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கக் கூட... மேலும் பார்க்க

சூரிய சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை வழங்கிய ராகுல்!

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் சூரிய சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வழங்கினார். இரண்டு நாள் பயணமாக தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலிக்கு வருகை தந்துள்ள காங்கிரஸ் ... மேலும் பார்க்க