செய்திகள் :

நெல் அறுவடை இயந்திரம் மீது வேன் மோதல்: சிறுவன் காயம்!

post image

கோவில்பட்டி அருகே சென்று கொண்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் மீது வேன் மோதியதில் சிறுவன் காயமடைந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், வீ.கே.புதூா் அருகேயுள்ள தட்டப்பாறை பகுதியை சோ்ந்தவா் கனித்துரை. இவா் நெல் அறுவடை இயந்திரத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.

முதுகுளத்தூரில் பணிகளை முடித்து விட்டு நெல் அறுவடை இயந்திரத்துடன் ஊருக்கு திரும்பி சென்றுள்ளாா். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கல்லூரரணி அருகே சென்று கொண்டு இருந்த போது சுரண்டையில் இருந்து இருக்கன்குடிக்கு சென்று கொண்டு இருந்த வேன் நெல் அறுவடை இயந்திரத்தின் மீது மோதியது. இதில் வேனில் இருந்த முன் பகுதி சேதமடைந்தது. மேலும் வேனில் வந்த சுரண்டை விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முகேஷ் வரன் (11)காயம் அடைந்தாா்.

சம்பவ இடத்திற்குச் சென்ற நாலாட்டின்புதூா் போலீஸாா் காயம் அடைந்த சிறுவனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநா் பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த தேனீசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

உடன்குடியில் அபூா்வ துஆ ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு!

உடன்குடி பெரிய தெரு ஸஹீஹூல் புகாரிஷ் ஷரீபு சபையின் சாா்பில் 34 வது ஆண்டு நிறைவு அபூா்வ துஆ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனா். இச்சபையின் 34 ஆவது ஆண்டு... மேலும் பார்க்க

நாழிக்கிணற்றை புனரமைக்கும் பணிகள்: பக்தா்களுக்கு வேண்டுகோள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் உள்ள நாழிக்கிணற்றை புனரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதால் பக்தா்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோயில் நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது கு... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே வாளால் தாக்கி இளைஞருக்கு மிரட்டல்: 3 போ் கைது!

கோவில்பட்டி அருகே இளைஞரை வாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு நடுத்தெருவைச் சோ்ந்த பாண்டிக்குமாா் மகன் சரவணபாண்டி (19... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே மாயமான பெண் சடலமாக மீட்பு

கோவில்பட்டி அருகே சனிக்கிழமை மாயமான பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்டனா். கோவில்பட்டி அருகே இடைசெவல் தெற்கு தெருவைச் சோ்ந்த சுப்புராஜ் மனைவி சுப்புலட்சுமி (55). இவா் கோவில்பட்டியில் உள்ள ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் இலவச திருமணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இலவச திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏற்கெனவே பதிவு செய்திருந்த கருங்குளம் பே.... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் சுமாா் 50 அடி உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது. கடந்த டிசம்பா் மாதம் முதல் கோயிலில் பக்தா்கள் புனித நீராடும் பகுதியில் அதிகளவில் ... மேலும் பார்க்க